அத்தி திருவண்ணாமலை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அத்தி (ⓘ) (ஆங்கிலம்: Athi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள செய்யாறு வட்டத்தில் இருக்கும் ஓர் ஊராட்சி ஆகும்.
Remove ads
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 12.6482107°N 79.6234131°E ஆகும். வந்தவாசி - காஞ்சிபுரம் சாலையில், வந்தவாசியில் இருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் உள்ளது பெருநகர் எனும் ஊர் (காஞ்சியில் இருந்து சுமார் 22 கி.மீ. தொலைவு). பெருநகரில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ளது அத்தி கிராமம்.
மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 798 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50.5% ஆண்கள், 49.5% பெண்கள் ஆவார்கள். அத்தி மக்களின் சராசரி கல்வியறிவு 48.2% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 59.7%, பெண்களின் கல்வியறிவு 40.2% ஆகும். அத்தி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
அருள்மிகு அத்தீஸ்வரர் கோவில்
அத்தீஸ்வரர் கோவில் சோழர் காலத்து பழமையான சிவன் கோவில். இது ஓர் தேவார வைப்புத் தலமாகும்.
போக்குவரத்து
சென்னையில் இருந்து உத்திரமேரூர் வழியாக வந்தவாசி செல்லும் பேருந்தில் ஏறினால், மானாம்பதி கூட்டுச்சாலை (மானாம்பதி கூட்டு ரோடு) பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, அங்கிருந்து பெருநகர் வந்து, அத்தி கிராமத்தை அடையலாம். மானாம்பதி கூட்டுச்சாலை (மானாம்பதி கூட்டு ரோடு)-இல் இருந்து ஏறத்தாழ 15 கி.மீ. தொலைவில் உள்ளது அத்தி கிராமம். பெருநகரில் இருந்து செல்ல ஆட்டோ வசதி உண்டு.
குறிப்புகளும் மேற்கோள்களும்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads