அரசு மகளிர் கல்லூரி, சிறிநகர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிறிநகர் மகளிர் கல்லூரி என்று பொதுவாக அழைக்கப்படும் சிறிநகர் அரசு மகளிர் கல்லூரி, என்பது ஜம்மு-காஷ்மீரின் கோடைக்கால தலைநகரமான சிறிநகரில் உள்ள முஹம்மது அப்துல்லா சாலையில் ஸ்ரீ பிரதாப் கல்லூரியின் எதிரே உள்ள லால் சவுக் அருகே 8.50 ஏக்கர் வளாகத்தில் 950 இல் நிறுவப்பட்ட மகளிர் கல்லூரியாகும். [1]
இந்த கல்லூரியும் இன்னும் நான்கு கல்லூரிகளும் இணைந்து ஆரம்பிக்கப்பட்ட சிறிநகர் தொகுப்பு பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது,[2]
பல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா)வால் அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்த இளங்கலைக் கல்லூரியானது, தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையால் 'ஏ' தரத்துடன் அங்கீகாரம் பெற்றுள்ளது[3].
Remove ads
உருவாக்கம்
சம்மு-காசுமீரின் அப்போதைய பிரதமர் ஷேக் முகமது அப்துல்லாவின் ஆட்சியின் போது, அக்டோபர் 1950 ஆம் ஆண்டில்அம்மாநில அரசால் இக்கல்லூரியை, பல்வேறு சமூக-கலாச்சாரப் பின்னணியிலிருந்து வரும் பெண்களின் முன்னேற்றத்திற்காக நிறுவியுள்ளது.
துறைகள்
- மனித மேம்பாட்டு துறை
- ஆங்கிலத் துறை
- அறிவியல் துறை
- கணினி அறிவியல் துறை
- சமூக அறிவியல் துறை
- மனிதநேயம், இஸ்லாமிய மற்றும் கிழக்கத்திய கற்றல் துறை
- வீட்டு அறிவியல் துறை
பட்டங்கள்[4]
- இளங்கலை அறிவியல் (மருத்துவம்)
- இளங்கலை அறிவியல் (மருத்துவம் அல்லாத)
- இளங்கலை அறிவியல் (வீட்டு அறிவியல்)
- இளங்கலை கலை
- இளங்கலை (இதழியல் மற்றும் வெகுஜன தொடர்பு)
- ஒருங்கிணைந்த எம்சிஏ.
- இளங்கலை கலை (ஹானர்ஸ் ஆங்கிலம்)
- மாஸ்டர் ஆஃப் சயின்ஸ் (ஹோம் சயின்ஸ்)
- நர்சிங் இளங்கலை
அங்கீகாரம்
தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார அவை (என்ஏஏசி) சிறிநகரில் உள்ள இந்த அரசு மகளிர் கல்லூரிக்கு ஏ தரம் வழங்கியுள்ளது.[5]
மேலும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads