சிறிநகர்
இது இந்தியாவின் சம்மு காசுமீர் மாநில கோடை காலத் தலைநகர் மற்றும் மாநகராட்சி ஆகும் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஸ்ரீநகர் (காஷ்மீரி: سِری نَگَر, Urdu: سری نگر, Srinagar) இந்தியாவின் ஒன்றியப் பகுதிகளில் ஒன்றான ஜம்மு காஷ்மீரின் கோடை காலத் தலைநகராகும். இது காஷ்மீர் பள்ளத்தாக்கில், ஸ்ரீநகர் மாவட்டத்தில், ஜீலம் ஆற்றின் கரையிலுள்ளது. இங்குள்ள தால் ஏரியும், சிகாரா எனும் படகு வீடுகளும் புகழ் பெற்றவை. இவ்வூர் காஷ்மீர் கைவினைப் பொருட்களுக்கும், உலர் பழங்களுக்கும் பெயர்பெற்றது. தால் ஏரிக்கரை அருகில் உள்ள சங்கராச்சாரியார் மலை மீது சங்கராச்சாரியார் கோயில் உள்ளது.
Remove ads
போக்குவரத்து
இருப்புப் பாதை
ஜம்மு-பாரமுல்லா இருப்புப் பாதை, ஸ்ரீநகருடன், பாரமுல்லா, அனந்தநாக், பனிஹால், காசிகுண்ட், அனந்தநாக், ஜம்மு நகரங்களை இணைக்கிறது.
வானூர்தி நிலையம்
ஸ்ரீநகர் வானூர்தி நிலையம் புதுதில்லி, லே, மும்பை, சண்டிகர், ஜம்மு போன்ற முக்கிய நகரங்களுடன் இணைக்கிறது.
சாலைகள்
ஜம்மு - லே தேசிய நெடுஞ்சாலை ஸ்ரீநகருடன் இணைக்கிறது.
மக்கள்தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, ஸ்ரீநகர் மாநகராட்சியின் மொத்த மக்கள்தொகை 11,80,570 ஆகும்.அதில் ஆண்கள் 6,18,790, பெண்கள் 561,780 ஆகவுள்ளனர். சராசரி எழுத்தறிவு 75.87% ஆகவுள்ளது. இங்கு இசுலாமியர்கள் 95.97%, இந்துக்கள் 2.75%, சீக்கியர்கள் 0.92%, கிறித்தவர்கள் 0.21% ஆகவும் மற்றவர்கள் 0.16% ஆகவுள்ளனர்.[1]
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads