ஆனந்தவல்லீஸ்வரம் ஸ்ரீ மகாதேவர் கோயில்
கேரளாவின் கொல்லம் மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆனந்தவல்லீஸ்வரம் ஸ்ரீ மகாதேவர் கோயில் (Anandavalleeshwaram Sri Mahadevar Temple) இந்தியாவின் கேரளாவில் கொல்லம் நகரில் உள்ள பண்டைய இந்துக் கோவில்களில் ஒன்றாகும்[1]. சிவபெருமானும் ஆனந்தவள்ளியும் இக்கோயிலின் முக்கிய தெய்வங்களாகும். நாட்டுப்புறக் கதைகளின்படி, பரசுராம முனிவர் சிவன் சிலையை நிறுவியுள்ளார். கேரளாவில் உள்ள 108 புகழ்பெற்ற சிவன் கோயில்களில் இந்த கோயிலும் ஒன்றாகும்[2][3]. இது கொல்லம் நகரத்தின் முக்கிய இடமான ஆனந்தவல்லீஸ்வரத்தில் அமைந்துள்ளது, இது கொல்லம் ஆட்சியர் அலுவலக்த்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது.
Remove ads
முக்கியத்துவங்கள்
ஆனந்தவல்லீஸ்வரம் ஸ்ரீ மகாதேவர் கோயிலின் பிரதான கருவறை 1200 ஆண்டுகள் பழமையானது. இது தேக்கு மரத்தில் கட்டப்பட்டது. ஸ்ரீ கிருஷ்ணன், மகா விஷ்ணு, பூமி தேவி மற்றும் லட்சுமி தேவி ஆகிய தெய்வங்களைக் கொண்ட இந்தியாவில் உள்ள ஒரே இந்து கோயில் இது ஒரு கட்டமைப்பின் கீழ் (கருவறை) சிலைகளாக புனிதப்படுத்தப்பட்டுள்ளது[4]. இந்த கோயில் கொல்லம் நகரில் அமைந்துள்ளது[5]. கேரளத்தின் 108 சிவன் கோயில்களில் கொல்லம் ஆனந்தவல்லீஸ்வரம் கோயில் ஒன்றாகும் என்றும் இது சிவன் அர்ப்பணிக்கப்பட்ட முனிவர் பரசுராமா் நிறுவியுள்ளாா் என்றும் நம்பப்படுகிறது[6][7]. கொல்லம் நகரத்தின் மூன்று மகாதேவா் கோயில்களில் இதுவும் 108 சிவாலய தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 108 சிவாலய தளங்களில் இரண்டாவது கோயில் கொல்லம் ராமேஸ்வரம் மகாதேவா் கோயில், மூன்றாவது கோயில் திரிக்கடவூர் மகாதேவா் கோயில்[8].
Remove ads
தெய்வங்கள் மற்றும் துணை தெய்வங்கள்
கோயிலின் பிரதான தெய்வம் சிவன் பிரதான கருவறைக்கு மேற்கே எதிர்கொள்ளும் மற்றும் அவரது துணைவியார் தேவி பார்வதியும் அதே கருவறை கிழக்கு நோக்கி உள்ளது. இந்த கோயிலின் சிவன் ஆனந்த ஸ்வரூபன் என்றும், தேவி பார்வதி ஸ்வயம்வர பார்வதி (ஆனந்தவள்ளி) என்றும் அழைக்கப்படுகிறார். இரு தெய்வங்களும் மகிழ்ச்சியான நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது, எனவே ஆனந்தவல்லீஸ்வரம் (மலையாளத்தில் ஆனந்தம் என்றால் 'மகிழ்ச்சி' என்று பொருள்). ஆரம்பத்தில் கோவிலில் சிவன் மட்டுமே தெய்வமாக இருந்தார், தேவி பார்வதி பின்னர் ஆனந்தவல்லி வடிவத்தில் புனிதப்படுத்தப்பட்டார். தேவி பார்வதியின் கர்பக்ரிஹா நுழைவாயிலுக்கு அருகில் என்றாலும், ஒருவர் சிவபெருமானின் கருவறைக்கு வழிவகுக்கும் கதவு வழியாக மட்டுமே கோவிலுக்குள் நுழைய வேண்டும்.
Remove ads
துணை தெய்வங்கள்
- கணபதி
- முருகன்
- ஸ்ரீ கிருஷ்ணன்
- அனுமன் சுவாமி
- சுவாமி அய்யப்பன்
- மகா விஷ்ணு
- லட்சுமி தேவி
- பூமி தேவி
- நாக தேவதங்கள்

கோயில் திருவிழா
ஆனந்தவல்லீஸ்வரம் மகாதேவர் கோயிலின் வருடாந்த திருவிழா மார்ச்-ஏப்ரல் மாதத்தில் (மலையாள மாதம்: மீனம்) பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த பத்து நாள் திருவிழா பாரம்பரியமான 'திரிகோடியெட்டு' உடன் தொடங்கும். பல்லிவெட்டா சடங்கு, அரட்டு, அராட்டு எத்திரெல்பு, எஜுனல்லத்து, கச்சா ஸ்ரீபாலி, கெட்டுகாஷா சடங்கு மற்றும் வருடாந்திர திருவிழாவின் ஒரு பகுதியாக நடனம், நாடகங்கள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் பைரோடெக்னிக் காட்சி உள்ளிட்ட பிற கலாச்சார நிகழ்ச்சிகளும் இருக்கும்[9]. ஒவ்வொரு ஆண்டும் கோயிலால் கொண்டாடப்படும் மற்றுமொரு முக்கியமான திருவிழா சிவராத்திரி [10].கோயிலின் தாந்த்ரீக சடங்குகள் செங்கனூர் தாஜ்மோன் மேடத்திற்கு சொந்தமானது.
Remove ads
இடம்
கொல்லம் (குயிலன்) மாநகராட்சியின் மையத்தில் ஆனந்தவல்லீஸ்வரம் கோயில் அமைந்துள்ளது; கொல்லம் சந்தி ரயில் நிலையத்திலிருந்து 2.5 கி.மீ. பல யாத்திரை மற்றும் சுற்றுலா இடங்கள் கோயிலுக்கு அருகில் உள்ளன. அஷ்டமுடி ஏரி, திருமுல்லவரம் கடற்கரை, கொல்லம் ராமேஸ்வரம் மகாதேவா் கோயில் ஆகிய சுற்றுலா தலங்கள் உள்ளன.
கோயில் புகைப்படங்கள்
- ஆனந்தவல்லீஸ்வரம் ஸ்ரீ மகாதேவர் கோயில்
- கிழக்கு நாலம்பலம்
(ஆனந்தவள்ளி தேவி) - கிழக்கு கோபுரம்
- மேற்கு நாலமாபம்
(சிவபெருமான்) - தங்கக்கொடி மரம்
மேலும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads