ஆர். சண்முகசுந்தரம் (வழக்கறிஞர்)

தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

இராஜகோபால் சண்முகசுந்தரம் என்பவர் தமிழக அரசுத் தலைமை வழக்கறிஞராக உள்ளவராவார்.[1] திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் 1953 இல் பிறந்தவரான சண்முக சுந்தரம் 1977இல் வழக்கறிஞராக பதிவு செய்தார். 1989 -1991 இல் திமுக ஆட்சியில் அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞராகவும், 1996-2001 திமுக ஆட்சியில் மாநில தலைமை அரசு குற்றவியல் வழக்கறிஞராக பணியாற்றி அரசு வழக்கறிஞராக அனுபவம் பெற்றவர்.[2][3] இவர் இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவைக்கு தமிழ்நாட்டிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி சார்பாக இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டு 2002-2008 காலகட்டத்தில் இருந்தார். 1995 ஆம் ஆண்டு மே 30 ஆம் தேதி ஜெயலலிதா மீது ஊழல் வழக்குப் பதிவு செய்யப் போகும் போது இவர் தாக்கப்பட்டார். "வெல்டிங் "குமார் மற்றும் 6 பேர் இந்த தாக்குதலில் ஈடுபட்டதற்குதண்டனை பெற்றனர்.[4][5][6]

இதே பெயர் கொண்ட எழுத்தாளரைப் பற்றி அறிய, ஆர். சண்முகசுந்தரம் என்ற பக்கத்தைப் பார்க்கவும்.
விரைவான உண்மைகள் ஆர். சண்முகசுந்தரம், தமிழக அரசுத் தலைமை வழக்குரைஞர் ...
Remove ads

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads