இளங்கண்டீரக்கோ
சங்கால மனிதர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
இளங்கண்டீரக்கோ என்பவன் கண்டீரக் கோப்பெரு நள்ளியின் தம்பி. கண்டீரக்கோப்பெருநள்ளி கடையெழு வள்ளல்களில் ஒருவன். நள்ளி எனச் சுருக்கமாகக் குறிப்பிடப்படுபவன். இளங்கண்டீரக்கோ தன் நண்பனான இளவிச்சிக்கோவுடன் விச்சிமலைநாட்டு அரண்மனையில் இருந்தான். அப்போது புலவர் வன்பரணர் அங்குச் சென்றார். இந்த இளங்கண்டீரக்கோவைத் தழுவினார். இளவிச்சிக்கோவைத் தழுவவில்லை. இவனை தழுவியதற்குக் காரணம் வள்ளலின் தம்பி என்பதாலாம். அவனைத் தழுவாமைக்குக் காரணம் அவன் வள்ளல் தன்மையே சிறிதுமில்லாத நன்னன் ஒருவனின் மகளை மணந்துகொண்டு அந்த நன்னன் மருமகனாய் இருந்ததுதானாம்.[1] இந்நிகழ்வு வன்பரணர் எழுதிய புறநானூறு 151வது பாடலில் வருகிறது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads