காட்டாங்குளத்தூர் காளத்தீசுவரர் கோயில்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
காட்டாங்குளத்தூர் காளத்தீசுவரர் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தின் காட்டாங்குளத்தூர் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.[1][2] காளத்தீசுவரர் இறைவராக வீற்றிருக்கும் இக்கோயிலின் தாயார் ஞானாம்பிகை ஆவார். இக்கோயிலில் தனியாக நவக்கிரக சன்னதி இல்லை. நாகர் உருவம் தரித்த இராகு, கேது காட்சியளிக்கின்றனர். இராகு, கேது பரிகார பூசைகள் நடைபெறுகின்றன.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 83 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள காட்டாங்குளத்தூர் காளத்தீசுவரர் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 12.8114°N 80.0271°E ஆகும்.
விஷ்ணு, பிரம்மா, துர்க்கை, தட்சிணாமூர்த்தி, சண்டிகேசுவரர், விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் மற்றும் பைரவர் ஆகியோர் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர்.[3][4]
இக்கோயிலானது, தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்குகிறது.[5]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads