காயா

From Wikipedia, the free encyclopedia

காயா
Remove ads

காயா (Memecylon umbellatum) காய்ப்பது இல்லை. எனவே இதனைக் 'காயா' என்றனர். இம்மரம் இலங்கையில் காயான் என அழைக்கப்படும். இது அநேகமாக கத்தி கைபிடி, கோடரி கைபிடி, விறகிற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

விரைவான உண்மைகள் காயா, உயிரியல் வகைப்பாடு ...

திருமால் தெய்வத்தை 'காயாம்பூ மேனியன் என்பர். மை நிறம் கொண்ட இந்தத் தெய்வத்தைத் தொல்காப்பியம் 'மாயோன்' எனக் குறிப்பிடுகிறது. மாயோனைத் தெய்வமாகக் கொண்ட முல்லை நிலத்துக் கருப்பொருள்களில் ஒன்று காயா-மலர்.

Remove ads

சங்க இலக்கியங்களில் காயா

காயா என்னும் மலர் சங்க இலக்கியங்களில் இவ்வாறு பயின்று வருகிறது. அவற்றில் அது விளக்கப்படும் பாங்கினை இங்குக் காணலாம்.

முல்லை-நிலத்தில் மணி என்னும் நீல-நிறத்தில் பூக்கும்.[1]
மயில் கூட்டம் போல் பூத்துக் கிடக்கும்.[2]
செறிவான இலைகளை உடையது. மகளிர் நெற்றியில் கைக்கும் பொட்டுப்போல் பூத்துக் கிடக்கும்.[3]
மகளிர் பறித்து விளையாடித் தழையாடையில் இணைத்துப் பயன்படுத்துவர்.[4]
சிறுசிறு பூக்களாக இருக்கும்.[5]
முல்லை-நிலத்தில் பூக்கும்.[6]
தேன் கொண்டது.[7]
மென்மையானவை.[8]
மணியைப் போன்ற காயா பவள நிற முல்லை நிலத்தில் உதிர்ந்து கிடக்கும்.[9]

Remove ads

மேலும் பார்க்க

வெளி இணைப்புகள்

மேற்கோள் குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads