கொத்தநல்லூர்

கேரளாவின் கோட்டயம் மாவட்ட கிராமம் From Wikipedia, the free encyclopedia

கொத்தநல்லூர்map
Remove ads

கொத்தநல்லூர் (Kothanalloor) இந்தியாவின் கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள வைக்கம் தாலுகாவில் அமைந்துள்ள ஒரு கிராமமாகும். இது கோட்டயம்-எர்ணாகுளம் (கொச்சி) நெடுஞ்சாலையில், கோட்டயத்திலிருந்து 17.5 கிலோமீட்டர் தொலைவிலும், எர்ணாகுளத்திலிருந்து 49.1 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.[1] அருகிலுள்ள இரயில் நிலையம் குருப்பந்தாராவில் 3.9 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

விரைவான உண்மைகள் கொத்தநல்லூர்Kothanalloor மூதப்பா, நாடு ...
Remove ads

மதம்

கொத்தநல்லூரில் இந்து மதம் மற்றும் கிறித்தவ மதம் இரண்டும் பின்பற்றப்படுகின்றன. ஆனால் கொத்தநல்லூர் கிராமத்தில் கிறித்தவம் முக்கிய மதமாகும். தேவி கோயில் (வன துர்கா தேவி),[2] மார் சப்போர் மற்றும் மார் புரோத் போரேன் கத்தோலிக்க தேவாலயம்[3], புனித மேரி ஞானயா கத்தோலிக்க தேவாலயம் ஆகியவை இங்குள்ள முக்கிய வழிபாட்டுத் தலங்களாகும். இரட்டை புனிதர்களான 'கண்டேசங்கல்' விழாவையொட்டி, ஒவ்வோர் ஆண்டும் சூன் மாதம் 18 ஆம் தேதி புனித கெர்வாசிகள் மற்றும் புனித புரோதாசிசு போரேன் தேவாலயத்தால் நடத்தப்படும் "இரட்டையர்கள் சந்திப்பு" என்ற பெயரால் கொத்தநல்லூர் இப்போது வெளிநாடுகளுக்கும் பரவலாக அறியப்படுகிறது. கேரளாவில் உள்ள அனைத்து மதங்களையும் சேர்ந்த இரட்டையர்கள் இரட்டையர்கள் சந்திப்பில் பங்கேற்கின்றனர்.

Remove ads

கல்வி

கொத்தநல்லூர் இம்மானுவேல் உயர்நிலைப் பள்ளி, 1919 ஆம் ஆண்டு 'முதப்பா மொழி (இரண்டாம் நிலை) பள்ளி' என்று தொடங்கப்பட்டது. முன்னர் மார் சப்போர் மற்றும் மார் புரோத் தேவாலயம் என்று அழைக்கப்பட்ட புனித கெர்வாசி மற்றும் புரோதாசிசு வெளிநாட்டு தேவாலயத்தின் நிர்வாகத்தின் கீழ் இப்பள்ளி தொடங்கப்பட்டது. 2500 என்ற எண்ணிக்கைக்கும் மேற்பட்ட மாணவர்கள் இங்கு கல்வி பயில்கின்றனர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இப்பள்ளியில் பணிபுரிகின்றனர்.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads