கோபிகா குகை கல்வெட்டுக்கள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கோபிகா குகைக் கல்வெட்டு (Gopika Cave Inscription), இதனை மௌகரி மன்னர் இரண்டாம் அனந்தவர்மனின் நாகார்ஜுனி மலைக்குகை கல்வெட்டு என்றும் அழைப்பர். இக்கல்வெட்டு இந்தியாவின் பிகார் மாநிலத்தின் கயா மாவட்டத்தில் உள்ள பராபர் குகைகள் அருகே கோபிகா குகையில் கிபி 1788-இல் கண்டுபிடிக்கப்பட்டது.[2][3]கிபி 5 அல்லது 6-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட இந்த குகைகல்வெட்டு, சக்தி வழிபாட்டாளர்களின் துர்கை தெய்வத்தைப் போற்றி எழுதப்பட்ட கல்வெட்டாகும்.[4][5] 18-ஆம் நூற்றாண்டில் கோபிகா குகையை ஆய்வு செய்த தொல்லியல் அறிஞர்களுக்கு, கோபிகா குகையில் மௌகரி வ்மசத்தின் இரண்டாம் அனந்தவர்மன் நிறுவிய துர்கையின் கோயிலை கண்டுபிடிக்க முடியவில்லை. [4][6]
கிமு மூன்றாம் நூற்றாண்டின் துவக்கத்தில், நாகார்ஜுனி மலையில் அருகே அமைந்த பராபர் குகைகள், லோம ரிஷி குகை மற்றும் கோபிகா குகைகளை பேரரசர் அசோகர் ஆசிவகத் துறவிகள் தங்கி தியானம் செய்ய கொடையாக வழங்கினார். இவைகள் கயைக்கு வடக்கே 16 மைல் தொலைவில் உள்ளது.[1]
Remove ads
விளக்கம்


கோபிகா குகையின் நுழைவு நடைப்பாதையின் உள்ளே பாறைச் சுவரில் கல்வெட்டு செதுக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு 5 அடி நீளமும், 2 அடி அகலத்தில் குப்தர் கால சமஸ்கிருத எழுத்துமுறையில் மந்திர வடிவில் 10 வரிகள் கொண்டது. சமஸ்கிருத மொழியின் ஆரம்ப இந்தியக் கல்வெட்டுகளில் இதுவும் ஒன்றாகும். [7] கல்வெட்டு பாதுகாப்பாக இருப்பினும், இவ்விடத்தில் இருந்த துர்கை கோயிலை பராமரிப்பதற்கு மன்னரால் தானமாக வழங்கப்பட்ட கிராமங்களின் பெயர்கள் காணவில்லை. மேலும் கல்வெட்டின் இறுதியான பத்தாவரி வரி வேண்டுமென்றே சேதப்படுத்தப்பட்டுள்ளது.[8]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads

