சுப்பிரமணியம் சிவபாலன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சுப்பிரமணியம் சிவபாலன் (Subramaniam Sivapalan, இறப்பு: 1960) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.
Remove ads
ஆரம்ப வாழ்வு
சிவபாலன் 1980 வாக்கில் திருகோணமலை மாவட்ட நீதிமன்ற செயலாளராகப் பணியாற்றிய எம். சுப்பிரமணியம் எனபவருக்குப் பிறந்தவர். திருகோணமலை உவெசுலியன் மிசன் ஆங்கிலப் பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும், யாழ் சம்பத்தரிசியார் கல்லூரி, கொழும்பு உவெசுலி கல்லூரி ஆகியவற்றில் உயர் கல்வியையும் கற்றார். பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்டு அரசு எழுத்தராகப் பணியாற்றத் தொடங்கினார்.
1935 இல் கொட்டுக்குளம் பற்று பிரிவின் தலைமைக் கிராம அலுவலராகவும், பின்னர் தம்பலகாமம் பிரிவின் தலைமைக் கிராம அலுவலராகவும் நியமனம் பெற்றார்.
Remove ads
அரசியல் வாழ்வு
சிவபாலன் 1947 நாடாளுமன்றத் தேர்தலில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1] 1952 தேர்தலில் போட்டியிட்டு இலங்கைத் தமிழரசுக் கட்சி வேட்பாளர் என். ஆர். இராசவரோதயத்திடம் தோற்றார்.[2]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads