ஜவகர் கோளரங்கம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜவகர் கோளரங்கம் (Jawahar Planetarium) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜ் நகரில் அமைந்துள்ளது.[1] இது 1979-இல் கட்டப்பட்டது. இக்கோளரங்கம் நேரு-காந்தி குடும்பத்தின் முன்னாள் வசிப்பிடமான ஆனந்த பவனுக்கு அருகில் அமைந்துள்ளது. ஆனந்த பவன் தற்போது அருங்காட்சியகமாக உள்ளது. இது 'ஜவகர்லால் நேரு நினைவு நிதி' (1964-இல் நிறுவப்பட்டது) மூலம் நிர்வகிக்கப்படுகிறது. இதன் தலைமையகம் புது தில்லியில் உள்ள தீன் மூர்த்தி பவனில் உள்ளது.[2]
ஒவ்வொரு ஆண்டும், இந்தியாவின் முதல் பிரதமரின் பிறந்தநாளான நவம்பர் 14 அன்று, ஜவகர்லால் நேரு நினைவு நிதியத்தின் அனுசரணையில் ஏற்பாடு செய்யப்படும் மதிப்புமிக்க 'ஜவகர்லால் நேரு நினைவு விரிவுரை' கோளரங்கத்தில் நடத்தப்படுகிறது.
Remove ads
மேலும் பார்க்கவும்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads