டி. எஸ். சிவஞானம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
(நீதியரசர்) டி. எஸ். சிவஞானம் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் பணியமர்வு நீதிபதி ஆவார்.[1] அவர் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் கணினி குழுவின் தலைவராக உள்ளார். 31.03.2009 அன்று மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி சிவஞானம் 29.03.2011 அன்று நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.[2]
Remove ads
ஆரம்ப கால வாழ்க்கை
டாக்டர் டி. எஸ். சுப்பையா மற்றும் திருமதி நளினி சுப்பையா ஆகியோர் நீதிபதி டி. எஸ். சிவஞானத்தின் பெற்றோர். இவர் 16.09.1963 அன்று பிறந்தார். நீதிபதி சிவஞானம் தனது இளங்கலை அறிவியல் பட்டப் படிப்பை சென்னை லயோலா கல்லூரியில் பட்டம் பெற்றார் மற்றும் அவர் தனது சட்டப் பட்டத்தை மெட்ராஸ் சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்று 10.9.1986 அன்று தமிழக பார் கவுன்சிலில் சேர்ந்தார்.
ஒரு வழக்கறிஞராக
வழக்கறிஞராக தன்னை பதிவுசெய்த பிறகு, நீதிபதி சிவஞானம் மூத்த வழக்கறிஞரான ஆர். காந்தியிடம் இளம் வழக்கறிஞராக சேர்ந்தார். நீதிபதி சிவஞானம் 2000 ஆம் ஆண்டில் மத்திய அரசின் கூடுதல் சட்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.[3]
உயர் நீதிமன்ற நீதிபதியாக
31.03.2009 அன்று மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நீதிபதி சிவஞானம் நியமிக்கப்பட்டார், பின்னர் அவர் 29.03.2011 அன்று நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் கணினி குழுவின் தலைவராக உள்ளார்.[4]
தமிழ்நாடு மாநில நீதித்துறை அகாடமி
நீதிபதி டி. எஸ். சிவஞானம், தமிழ்நாடு மாநில நீதித்துறை அகாடமி ஆளுநர் குழுவின் உறுப்பினர்களில் ஒருவர் ஆவார்.[5]
மெய்நிகர் விசாரணைகள்
கோவிட் - 19 பெருந்தொற்றின் போது, வழக்குகளை மெய்நிகர் விசாரணையை நடத்துவதற்காக "மைக்ரோசாப்ட் டீம்" இன் உரிமங்களை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நீதிபதிகளுக்கும், மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் கணினி குழு மூலமாக, வாங்க சிவஞானம் முடிவு செய்து அதன்படி அனைத்து நீதிபதிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.[6]
மின்னணு செயல்முறைகள்
நீதிபதி டி.எஸ். சிவஞானம் தலைமையிலான மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் கணினி குழு எடுத்த மற்றொரு முக்கியமான நடவடிக்கை, என்.எஸ்.டி.இ.பி (தேசிய சேவை மற்றும் மின்னணு செயல்முறைகளின் கண்காணிப்பு) அறிமுகப்படுத்தியது ஆகும். செயல்முறை சேவையகங்களுக்காக ஸ்மார்ட் கைபேசிகளை வாங்குவதன் மூலம், நீதிமன்ற செயல்முறைகளின் சேவை குறுகிய காலத்திற்குள் விரைந்து சார்பு செய்யப்படுகிறது.
முக்கிய வழக்குகள்
கனிம சுரங்கங்கள் வழக்கு

ஒரு முக்கியமான வழக்கில், நீதிபதிகள் டி. எஸ். சிவஞானம் மற்றும் ஜி.ஜெயச்சந்திரன் ஆகியோர் ஐ. ஏ. எஸ் அதிகாரி உ. சகாயம் தலைமையிலான கமிஷனை முற்றுப்புள்ளி வைக்கும் உத்தரவை பிறப்பித்தனர். இந்த வழக்கு தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து கிரானைட் சுரங்க ஒப்பந்தங்கள் மற்றும் உரிமங்கள் குறித்து விசாரணை நடத்த முன்னாள் மதுரை மாவட்ட ஆட்சியர் சாகயம் சிறப்பு அதிகாரி / சட்ட ஆணையராக நியமிக்கப்பட்டது தொடர்பான பிரச்சினை தொடர்பானது.[7][8]
ஸ்டெர்லைட் ஆலை வழக்கு
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் செப்பு ஆலை சார்பாக வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த 10 மனுக்களின் தொகுப்பை நீதிபதிகள் டி எஸ் சிவஞானம் மற்றும் வி பவானி சுப்பரோயன் ஒரு தீர்ப்பில் தள்ளுபடி செய்தனர்.[9]
வருமான வரி அறிவிப்பு வழக்கு
இந்திய முன்னாள் நிதியமைச்சர் திரு. ப. சிதம்பரம் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் தாக்கல் செய்த ரிட் மனுக்களை நீதிபதி டி. எஸ். சிவஞானம் அனுமதித்தார், வரிக்கு விதிக்கப்படும் வருமானம் மதிப்பீட்டில் இருந்து தப்பித்ததாக நம்புவதற்கு காரணம் இருப்பதாக கூறி கோரிக்கை அறிவிப்பு திரு.சிதம்பரத்திற்கு வருமான வரி துறை அறிவிப்பு அனுப்பி இருந்தது. அதனை, திரு. ப. சிதம்பரம் எதிர்த்து வழக்கு தாக்கல் செய்திருந்தார். திரு. சிதம்பரம் மற்றும் அவரது குடும்பத்தினரும் காபி தோட்டம் வளர்க்கிறார்கள் என்றும் காபியை, கூழ் செய்து மற்றும் உலர்த்திய பிறகு, மூல காபியை விற்கிறார்கள் என்றும் அதனால். அதன் விற்பனையின் வருமானம் விவசாய வருமானம் என்றும் அந்த வருமானம், வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 10 (1) இன் படி வருமான வரி விலக்கு பெற்றது என்பதே மனுதாரர் தரப்பு வாதம் ஆகும்.[10]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads