து. ஜெயக்குமார்
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
து. ஜெயக்குமார் (D. Jayakumar) இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சரும் ஆவார். இவர் 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இராயபுரம் தொகுதியிலிருந்து, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இதற்கு முன்னதாக இதே தொகுதியிலிருந்து, 1991,[2] 2001, 2006, 2011 தேர்தல்களில் ஆகியவற்றில் வெற்றிபெற்றார்.[3][4][5] 1996ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தோல்வியுற்றார்.[6]
Remove ads
அமைச்சர்
ஜெயலலிதா தலைமையிலான 1991 - 96 ஆம் கால அமைச்சரவையில் கால்நடை பராமரிப்பு, மீன்வளம், பால்வளம், வனம், பிற்படுத்தப்பட்டோர் நலம் ஆகிய துறைகளின் அமைச்சராக இருந்தார்.[6]
2001-06 ஆம் கால அமைச்சரவை யில் சட்டம், தகவல் தொழில்நுட்பம், மின்சாரம் ஆகிய துறைகளின் அமைச்சராக இருந்தார்.[6]
சட்டப்பேரவைத் தலைவர்
2006இல் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற இவர் தமிழகச் சட்டப்பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்பதவியிலிருந்து 2012 செப்டம்பர் 29 ஆம் நாள் முதல் விலகிக்கொள்வதாகத் தெரிவித்தார்.[7]
சொந்த வாழ்க்கை
இவரது தந்தையின் பெயர் துரைராஜ். மனைவியின் பெயர் ஜெயக்குமாரி. சென்னை பச்சையப்பன் கல்லூரியில் 1981ஆம் ஆண்டு இளநிலை அறிவியலும் (வேதியியல்), சென்னை சட்டக்கல்லூரியில் 1987இல் இளங்கலைச் சட்டப்படிப்பும் முடித்தார்.[8]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads