நெமிலிச்சேரி (திருவள்ளூர் மாவட்டம்)

தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

நெமிலிச்சேரி (Nemilicheri) என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில் திருநின்றவூர் பகுதிக்கு அருகிலுள்ள பகுதியாகும்.

விரைவான உண்மைகள் நெமிலிச்சேரிNemilicheri, நாடு ...

கடல் மட்டத்திலிருந்து சுமார் 76 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள நெமிலிச்சேரி பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 13.1184°N 80.0494°E / 13.1184; 80.0494 ஆகும். திருநின்றவூர், பட்டாபிராம், ஆவடி, வேப்பம்பட்டு மற்றும் பூந்தமல்லி ஆகியவை நெமிலிசேரி பகுதிக்கு அருகிலுள்ள சில முக்கியமான புறநகர்ப் பகுதிகளாகும்.

இரண்டாம் கட்ட வெளிவட்ட சாலை (வண்டலூர் - மீஞ்சூர் இடையே), நெமிலிச்சேரி வழியாகச் செல்கிறது.[2]

சென்னையிலிருந்து அரக்கோணம் மார்க்கம் செல்லும் புறநகர் இருப்புப் பாதையில், நெமிலிச்சேரி தொடருந்து நிலையம் அமைந்து, நெமிலிச்சேரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஊர்களுக்கு பலனளிக்கிறது.[3][4]

நெமிலிச்சேரி பகுதியானது, ஆவடி (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். இதன் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றவர் எசு.எம். நாசர் ஆவார். மேலும் இப்பகுதி, திருவள்ளூர் மக்களவைத் தொகுதியை சார்ந்தது. இதன் மக்களவைத் தொகுதி உறுப்பினராக கே. செயக்குமார், 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றார்.

Remove ads

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads