பட்டிவீரன்பட்டி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பட்டிவீரன்பட்டி (ஆங்கிலம்:Pattiveeranpatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
இந்த பேருராட்சி பட்டிவீரன்பட்டி, அழகாபுரி, எம்.ஜி.ஆர்.நகர், ராமகிருஷ்ணாபுரம், அண்ணாநகர், அம்பேத்கர்நகர் ஆகிய உட்கிடை கிராமங்களை உள்ளடக்கியது. இப்பகுதியின் முக்கிய தொழில்கள் தென்னை விவசாயம் மற்றும் ஆடு வளர்த்தல் ஆகும். 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 8602 மக்கள்தொகை கொண்ட இப்பேரூராட்சி, 2.59 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும் கொண்டது. இப்பேரூராட்சியானது நிலக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி)க்கும், திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [1]
Remove ads
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,290 வீடுகளும், 8,602 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 88.6% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,059 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 1,064 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 2,060 மற்றும் 0 ஆகவுள்ளனர்.[5]
Remove ads
ஆதாரங்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads