பழைய கொழும்பு கலங்கரை விளக்கம்
கலங்கரை விளக்கம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பழைய கொழும்பு கலங்கரை விளக்கம் (Old Colombo Lighthouse) அல்லது கொழும்பு கோட்டை மணிக்கூட்டுக் கோபுரம் ஒரு மணிக்கூட்டுக் கோபுரமாகவும் கொழும்பில் ஒரு கலங்கரை விளக்கமாகவும் இருந்தது. கலங்கரை விளக்கம் இப்போது செயல்படவில்லை. ஆனால் கோபுரம் ஒரு மணிக்கூட்டுக் கோபுரமாக செயல்படுகிறது. இது கொழும்பு கோட்டையில் சதாம் தெருவும், சனாதிபதி மாவத்தை (முன்பு இராணியின் சாலை) சாலையும் சந்திக்குமிடத்தில் அமைந்துள்ளது.
Remove ads
வரலாறு

இந்த கோபுரம் 1856-57ஆம் ஆண்டில் மணிக்கூட்டுக் கோபுரமாக கட்டப்பட்டது. மேலும், 25 பிப்ரவரி 1857இல் கட்டி முடிக்கப்பட்டது. இந்த கோபுரத்தை ஆளுநர் சர் என்றி யோர்ஜ் வார்டின் மனைவி (1797 - 1860) எமிலி எலிசபெத் வார்டு என்பவர் வடிவமைத்தார். [1] திரு யான் பிளெமிங் சர்ச்சில் (பொதுப்பணித்துறை தலைமை இயக்குநர்) மேற்பார்வையில் பொதுப்பணித் துறையால் இந்த கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 29 மீட்டர் உயரமுள்ள (95 அடி) கோபுரம் அந்த நேரத்தில் கொழும்பில் மிக உயரமான அமைப்பாக இருந்தது. [2] அசல் கடிகாரம் 1814ஆம் ஆண்டில் அப்போதைய ஆளுநர் சர் இராபர்ட் பிரவுன்ரிக் (1759 - 1833) அவர்களால் £ 1,200 செலவில் கட்டிமுடிக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால் பொருளாதாரக் காரணங்களால், 1857ஆம் ஆண்டு இறுதியாக நிறுவப்படும் வரை திட்டம் கிடப்பில் வைக்கப்பட்டது.
அருகிலுள்ள கட்டிடங்களால் அதன் ஒளி மறைந்து பின்னர் சூலை 12, 1952 இல் நிறுத்தப்பட்ட பின்னர் கலங்கரை விளக்கம் செயலிழக்கப்பட்டது. [3] நவீன காலி பக் கலங்கரை விளக்கம் அதன் மாற்றாக கடற்கரைச் சாலையில் அமைக்கப்பட்டது.
Remove ads
அம்சங்கள்
அசல் கொழும்பு கலங்கரை விளக்கம் கொத்தளத்தின் கடல் விளிம்பில் ஒரு கோட்டையில் அமைந்திருந்தது. இது ஒரு புதிய-பாரம்பரிய கட்டமைப்பாகும். இதில் 23 மீ (75 அடி) மர ஒளி கோபுரம் இரண்டு மாடி வட்ட செங்கல் கட்டிடத்திலிருந்து உயர்ந்து ஒரு விரிவான நெடுவரிசைகளால் சூழப்பட்டுள்ளது. [4] இது 1829ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. பின்னர் 1869க்கும் 1871க்குமிடையில் கோட்டை கோபுரங்களை அகற்றும்போது இடிக்கப்பட்டது. [5]
1852ஆம் ஆண்டில் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் கடிகாரத்தை ('பிக் பென்') தயாரிப்பதற்கு பொறுப்பான புகழ்பெற்ற ஆங்கில கடிகார தயாரிப்பாளர்களான தென்ட் அவர்களால் இந்த கடிகார வழிமுறை உருவாக்கப்பட்டது. மணிக்கூட்டுக் கோபுரம் 1857 மார்ச் 25 அன்று முறையாக இயக்கப்பட்டது. மணிக்கூட்டுக் கோபுரத்திலுள்ள முக்கிய மணி தோராயமாக 250 கிலோ எடையையும் (550 எல்பி), இரண்டு துணை மணிகள் 152 கிலோ (335 எல்பி) எடையையும் கொண்டிருந்தது.
ஊடுருவல் ஒளி 1867 இல் கோபுரத்திற்கு மாற்றப்பட்டது.[6] மண்ணெண்ணெயைப் பயன்படுத்தி இதன் விளக்கு எரிந்தது. 1907இல் இது வாயுவாக மாற்றப்பட்டது. 1933ஆம் ஆண்டில் இது மின்சாரம் மூலம் இயக்கப்படும் 1,500 மெழுகுவர்த்தி சக்தி ஒளியுடன் மாற்றப்பட்டது.
அக்டோபர் 1913 இல், கடிகாரத்தை மாற்ற வேண்டியிருந்தது. அதில் ஆறு அடி விட்டமுள்ள ஒளிரும் ஓப்பல் கண்ணாடி மெருகூட்டப்பட்டது. மணிக்கூட்டுக் கோபுரம் ஏப்ரல் 4, 1914 இல் மீண்டும் திறக்கப்பட்டது.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads