பூவரசங்குப்பம் இலட்சுமி நரசிம்மர் கோயில்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இலட்சுமி நரசிம்மர் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் விழுப்புரம் மாவட்டத்தின் பூவரசங்குப்பம் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு பெருமாள் கோயில் ஆகும்.[1][2]
கடல் மட்டத்திலிருந்து சுமார் 47.53 மீட்டர் உயரத்தில், 11.8499°N 79.5812°E என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு இக்கோயில் அமையப் பெற்றுள்ளது.
தட்சிண அகோபிலம் என்றும் இக்கோயில் அழைக்கப்படுகிறது. இக்கோயிலின் மூலவர் இலட்சுமி நரசிம்மர் மற்றும் தாயார் அமிர்தவல்லி ஆவர். உற்சவர் பிரகலாத வரதன் ஆவார். இக்கோயிலின் தலவிருட்சம் நெல்லி மரம் ஆகும். தீர்த்தம் சக்கர தீர்த்தம் ஆகும். இக்கோயிலில் பஞ்சராத்ர முறைப்படி பூசைகள் செய்யப்படுகின்றன. வைகுண்ட ஏகாதசி, நரசிம்மர் ஜெயந்தி, வைகாசி விசாகம், தமிழ் வருடப் பிறப்பு, தை மாத தீர்த்தவாரி, புரட்டாசி சனிக்கிழமைகள் ஆகியவை இக்கோயிலில் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.[3]
நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு, 2023ஆம் ஆண்டு சூலை மாதம் முதல் வாரத்தில், இக்கோயிலின் பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெற்றது.[4][5]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads