பெண்கள் கிறித்தவக் கல்லூரி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பெண்கள் கிறித்தவக் கல்லூரி (ஆங்கிலம்: Women's Christian College) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின் சென்னையிலுள்ள நுங்கம்பாக்கத்தின் கல்லூரி சாலையில் உள்ள ஒரு புகழ்பெற்ற மகளிர் கல்லூரி ஆகும்.
1915 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இக்கல்லூரி அரசு உதவி பெறும் படிப்புகளையும் தன்னாட்சி அந்தஸ்து பெற்ற தகுதியில் சுயநிதி படிப்புகளையும் மாணவர்களுக்கு வழங்கி வருகிறது.
Remove ads
வரலாறு
பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி 1915 ஆம் ஆண்டில் 41 மாணவர்கள் மற்றும் 7 ஆசிரியர்களுடன் இங்கிலாந்து, கனடா மற்றும் அமெரிக்காவில் அமைந்துள்ள 12 மிஷனரி சங்கங்களின் கூட்டு முயற்சியின் விளைவாக, தாராளவாத கலை மற்றும் அறிவியலில் இந்திய பெண்களுக்கு உயர் கல்வியை வழங்கும் நோக்கத்துடன் நிறுவப்பட்டதாகும். இக்கல்லூரியின் குறிக்கோள் "ஒளிரப்பண்ண ஒளி" என்பதாகும். ஆரம்பத்தில் சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டிருந்த இக்கல்லூரி 1982 ஆம் ஆண்டில் பல்கலைக்கழக மானியக் குழுவால் ஒரு தன்னாட்சி கல்லூரியாக அங்கீகாரம் பெற்றுள்ளது.[2][3] தற்போது இக்கல்லூரியில் இது நான்காயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் 209 ஆசிரியர்களோடு அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி பிரிவுகளில் பாடங்களை பயிற்றுவிக்கிறது.
இந்தியாவின் முதல் பெண் அரசியல் கைதியும், சுதந்திரப் போராட்ட வீரருமான ருக்மிணி லட்சுமிபதி இக்கல்லூரியின் முதல் வருட மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Remove ads
கல்லூரியின் முதல்வர்கள்
- எலினோர் மெக்டோகல்,
- எலினோர் ரிவெட், 1938–1947
- எலிசபெத் ஜார்ஜ், 1947–1950
- எலினோர் டி.மேசன், 1950–1956
- ரேணுகா முகர்ஜி, 1956–1965
- அன்னா டி.சக்கரியா, 1965-1971
- ரேணுகா சோமசேகர், 1971-1981
- இந்திராணி மைக்கேல், 1981-1994
- கண்மணி கிறிஸ்டியன், 1994-1998
- குளோரி கிறிஸ்டோபர், 1998–2003
- ரீட்டா ஜேக்கப் செரியன், 2003–2006
- ரிட்லிங் மார்கரெட் வாலர் 2006-2017
- லிலியன் ஐ ஜாஸ்பர், 2017- தற்போது வரை
அங்கீகாரம்
1982 ஆம் ஆண்டில் பல்கலைக்கழக மானியக் குழுவால் ஒரு தன்னாட்சி கல்லூரியாக அங்கீகாரம் பெற்றுள்ள இக்கல்லூரி, 2019 ஆம் ஆண்டில் தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையால் ஏ தரத்தை பெற்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும் 2022 ஆம் ஆண்டில் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பால் (NIRF) இந்தியாவில் உள்ள கல்லூரிகளில் இந்த கல்லூரி தரவரிசைப்பட்டியலில் 72 வது இடத்தைப் பிடித்துள்ளது.[4]
குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள்
- மேகா ஆகாஷ், நடிகை
- சுபாசினி அலி, அரசியல்வாதி
- ரெஜினா கசாண்ட்ரா, நடிகை மற்றும் மாடல்
- ஆண்ட்ரியா ஜெரெமையா, பாடகர் மற்றும் நடிகை
- அனஸ்வரா குமார், நடிகை
- ருக்மிணி லட்சுமிபதி, சுதந்திர போராட்ட வீரர் மற்றும் சென்னை மாகாணத்தின் முதல் பெண் அமைச்சர்
- எம். சாரதா மேனன், மனநல மருத்துவர் மற்றும் பத்ம பூஷண் விருது பெற்றவர்
- நடிகை ரேஷ்மி மேனன்
- சோனஜாரியா மின்ஸ், துணைவேந்தர், சிடோ கன்ஹு முர்மு பல்கலைக்கழகம்
- சி. பி. முத்தம்மா, இந்தியாவின் முதல் பெண் அரசு ஊழியர்
- சோபா நாராயண், பத்திரிகையாளர்
- தங்கம் பிலிப், ஊட்டச்சத்து நிபுணர் மற்றும் பத்மசிறீ விருது பெற்றவர் [5]
- சரண்யா பொன்வண்ணன், நடிகை
- ஹீரா ராசகோபால், நடிகை
- லத்திகா சரண், சென்னை மாநகர காவல் ஆணையர்
- மல்லிகா சீனிவாசன், தொழிலதிபர்
- ரூபா உன்னிகிருஷ்ணன், விளையாட்டு துப்பாக்கி சுடும் வீராங்கனை
- விபா பத்ரா, எழுத்தாளர், கவிஞர், விளம்பரதாரர்
- சுதா கொங்கரா, இயக்குநர்.
- ஷாமிலி, இந்திய நடிகை
Remove ads
படத்தொகுப்பு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads