பொன்னம்பலம் நாகலிங்கம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பொன்னம்பலம் நாகலிங்கம் (இறப்பு: 1980) இலங்கைத் தமிழ் இடதுசாரி அரசியல்வாதியும், இலங்கை செனட் சபை உறுப்பினரும் ஆவார்.
Remove ads
வாழ்க்கைச் சுருக்கம்
நாகலிங்கம் யாழ்ப்பாணத்தில் தெல்லிப்பழையில் பிறந்தவர். வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி, திருநெல்வேலி பரமேசுவரா கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்று, பின்னர் இலங்கை சட்டக் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றார்[1]. தெல்லிப்பழை, சுன்னாகம், உடுவில் ஆகிய இடங்களில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். நாகலக்சுமி என்பவரை 1933 ஆம் ஆண்டில் மலேசியாவில் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு ஆறு பிள்ளைகள். நாகலிங்கம் 1980 ஆம் ஆண்டில் இறந்தார். மனைவியார் 1997 இல் இறந்தார்.
Remove ads
அரசியலில்
மாணவராக இருக்கும் போதே தமிழ் இளைஞர் காங்கிரசில் இணைந்து அரசியலில் தீவிரம் காட்டினார். 1940களில் இடதுசாரிக் கட்சியான லங்கா சமசமாஜக் கட்சியில் சேர்ந்தார். 1947 தேர்தலில் அக்கட்சி வேட்பாளராக காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு தமிழ் காங்கிரசு வேட்பாளர் தந்தை செல்வநாயகத்திடம் தோற்றார்.[2]
1951 முதல் 1957 வரை இலங்கை செனட் சபை உறுப்பினராக இருந்தார். 1960 மார்ச்சு தேர்தலில் உடுவில் தேர்தல் தொகுதியில் லங்கா சமசமாசக் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டுத் தமிழரசுக் கட்சி வேட்பாளர் வி. தர்மலிங்கத்திடம் தோற்றார்.[3] 1960 சூலை, 1965 தேர்தல்களிலும் உடுவில் தொகுதியில் போட்டியிட்டு தர்மலிங்கத்திடம் தோற்றார். 1960களில் சுன்னாகம் நகரசபைத் தலைவராகவும் பணியாற்றினார்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads