மங்கலம் அணை
கேரளத்தின் பாலக்காடு மாவட்டதில் உள்ள அணை From Wikipedia, the free encyclopedia
Remove ads
மங்கலம் அணை (Mangalam Dam) என்பது தென்னிந்தியாவின், கேரளத்தின், பாலக்காடு மாவட்டத்தில், செருகுன்னபுழா ( மங்கலம் ஆற்றின் துணை ஆறு ) ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணை ஆகும். இது பாலக்காட்டிலிருந்து 50 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்த அணையின் கொள்ளளவு திறன் 25.34 மில்லியன் கன அடி. [1] பாலக்காடு மாவட்டத்தின் ஆலத்தூர் வட்டத்ததில் 1966 ஆம் ஆண்டில் பாசன நோக்கத்திற்காக ஒரு கால்வாய் அமைக்கபட்டு திறக்கப்பட்டது.
Remove ads
நிலவியல்
பெரும்பாவூர் கோட்டயம் அல்லது சாலக்குடி போன்ற பகுதிகளில்லிருந்து பெரும்பாலான மக்கள் இங்கு வருகிறார்கள். இப்பகுதியில் இரப்பர், மிளகு, காபி, மரவள்ளிக்கிழங்கு தோட்டங்கள் உள்ளன.
வடக்கஞ்சேரியில் இருந்து 16 கி.மீ தொலைவில் மங்ஙளம் அணை உள்ளது. கரீம்காயம், மண் அணை, ஓடென்டோட், குஞ்சியர்பதி, கவிலுபாரா, வட்டபாரா, நீதிபுரம், பொங்கண்டம், கடப்பரா, உப்புமன்னே, ஒலிபரா, பாலஸ்வரம்-வி.ஆர்.டி, சூரூபரா ஆகியவையும் இப்பகுதியில் உள்ளன.
2007 வெள்ளத்தின் போது ஒடெதொட்டிற்கு அருகிலுள்ள கவிலுபாறையில் பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. கரிம்காயம், ஓடென்தொட்டி, கடப்பரா பகுதியில் அடர்ந்த காடுகள் உள்ளன.
Remove ads
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads