மேல்குமாரமங்கலம் ஊராட்சி
இது தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் உள்ளது From Wikipedia, the free encyclopedia
Remove ads
மேல்குமாரமங்கலம் ஊராட்சி (M. k. mangalam Gram Panchayat), தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள அண்ணாகிராமம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, பண்ருட்டி சட்டமன்றத் தொகுதிக்கும்[6] கடலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [7] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2913 ஆகும். இவர்களில் பெண்கள் 1455 பேரும் ஆண்கள் 1458 பேரும் உள்ளனர்.
Remove ads
அடிப்படை வசதிகள்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[7]
Remove ads
பற்றி
இவ்வூர் தென்பெண்ணைக் கரையோரம் கடலூர் மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது.முன்னாளில் இவ்வூரில் பிராமணர்கள் அதிகம் வாழ்ந்து வந்தனர். இப்போது அவர்கள் வேற்றூர்களில் குடியேறிவிட்டனர்.
பன்னெடுங்காலமாக விவசாயமே மக்களின் பிரதான தொழிலாக இருந்து வந்தது. 2005-2015 காலகட்டங்களில் தென்பெண்ணையில் நடைபெற்ற ஆற்று மணல் கொள்ளையினால் நீராதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
முக்கிய விழாக்கள்
- வருடத்திற்கு ஒரு முறை அங்கு நடத்தப்படும் திரௌபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா.
- மாரியம்மன் கோவில் தேர் திருவிழா.
- 12 வருடத்திற்கு ஒரு முறை நடத்தப்படும் சிவன் கோயில் கும்பாபிஷேகம்.
Remove ads
சிற்றூர்கள்
இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[8]:
- மேல்குமாரமங்கலம்
- மேல்குமாரமங்கலம் காலனி
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads