வ. உ. சி. பூங்கா, கோயம்புத்தூர்

தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு பூங்கா From Wikipedia, the free encyclopedia

வ. உ. சி. பூங்கா, கோயம்புத்தூர்map
Remove ads

வ. உ. சிதம்பரனார் பூங்கா மற்றும் விலங்கியல் பூங்கா (V O Chidambaranar park and zoo) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கோயம்புத்தூர் நகரத்தில் அமைந்துள்ளது. நகரின் மையப்பகுதியான காந்திபுரத்தில் அமைந்துள்ள இப்பூங்கா வ. உ. சி. பூங்கா என சுருக்கமாக அழைக்கப்படுகிறது. 1965 ஆம் ஆண்டு[2] தொடங்கப்பட்டு ஓர் உயிரியல் மற்றும் பொழுதுபோக்கு[3] பூங்காவாகச் சுற்றுலாப் பயணிகளை இப்பூங்கா பெரிதும் கவர்கிறது. 2013 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இங்கு 335 பறவைகள், 106 பாலூட்டிகள் மற்றும் 54 ஊர்வன உள்ளிட்ட 890 விலங்குகள் இருந்தன. [4] வ. உ. சிதம்பரம்பிள்ளையின் நினைவாக இப்பெயர் பூங்காவிற்கு சூட்டப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாநகராட்சி வ.உ.சி. பூங்காவை நிர்வகிக்கிறது.[5]

விரைவான உண்மைகள் வ. உ. சி. பூங்கா, கோயம்புத்தூர், அமைவிடம் ...
Thumb
கருப்புப் புலிச்சுறா மீன்கள்

சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் இப்பூங்கா ஒரு பொழுதுபோக்கு மையமாக விளங்குகிறது. பொழுதுபோக்குப் பிரிவையொட்டி உயிரியல் பூங்கா உள்ளது. சிறுவர்களுக்காக விளையாட்டுச் சாதனங்களும், விளையாட்டுத் தொடருந்தும் அதற்கான சிறிய தொடருந்து நிலையமும், சார்மினார், வானூர்தி, பீரங்கி ஆகியவற்றின் மாதிரி வடிவமைப்புகளும், பசுமையான புல்தரையும், மரங்களும், அவற்றுக்கு நடுவே ஆங்காங்கே சிலையமைப்புகளும், வண்ண மீன்கள் நிலையம் ஒன்றும் இங்கு காணப்படுகின்றன.

Remove ads

பூங்காவும் மைதானமும்

உயிரியல் பூங்காவுடன் தொடர்புடைய ஒரு விளையாட்டு மைதானமும், குழந்தைகள் பூங்கா ஒன்றும் இங்கு அமைந்துள்ளன. இப்பூங்காவில் பொம்மை தொடர் வண்டி, சுராசிக் பூங்கா மற்றும் மீன்காட்சியகம் ஆகியன உள்ளன[6]. மைதானத்தில் அவ்வப்போது பொருட்காட்சிகள், விளையாட்டுப் போட்டிகள், ஆண்டுதோறும் சுதந்திரதின விழா, குடியரசுதின விழா போன்றவைகள் நடைபெறுகின்றன.[7] மேலும் சந்தனமரம் உள்ளிட்ட 200 வகையான மரங்கள் இங்கு காணப்படுகின்றன.[8]

Remove ads

வண்ணமீன்கள் காட்சியகம்

Thumb
சார்மினார் மாதிரி வடிவமைப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியால் இப்பூங்காவினுள் வண்ண மீன்கள் காட்சியகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இக்காட்சியகத்தில் கப்பீசு மீன்கள், கிளிமீன்கள், கோய்க்கெண்டை மீன்கள், வெள்ளைப் புலிச்சுறா மற்றும் கருப்புப் புலிச்சுறா மீன்கள், முத்து அரவணா மீன்கள், வெல்வெட்டுத் துணி மீன்கள் (ஆஸ்கர்) என பலவகை வண்ணமீன்கள் கண்ணாடிப்பெட்டிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அமைப்புகள்

Thumb
விளையாட்டுத் தொடருந்து

நீரூற்று, வானூர்தி, பீரங்கி, சார்மினார் ஆகியவற்றின் மாதிரி வடிவமைப்புகள், மணிப்புரி நடனமங்கை, கதக்களி நடனமாடும் ஆணின் சிலைகளுடன் மேலும் சில சிலைகள் அங்காங்கே புல்தரைகளுக்கும் மரங்களுக்குமிடையே அமைக்கப்பட்டுள்ளன.

விளையாட்டுத் தொடருந்து

Thumb
அப்துல் கலாம் மரம் நட்டதைத் தெரிவிக்கும் கற்பலகை.

குழந்தைகளுக்காக விளையாட்டுத் தொடருந்து ஒன்று இங்கு இயக்கப்படுகிறது. எஞ்ஜினுடன் மூன்று பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. சிறுவர்கள் மட்டுமல்லாது பெரியவர்களுக்கும் இதில் பயணிக்க (அனைவருக்கும் கட்டணம் உண்டு) அனுமதிக்கப்படுகின்றனர். இத் தொடருந்துப் பாதை மான்கள், ஒட்டகங்கள் பராமரிக்கப்படும் கூண்டுகளைச் சுற்றிச் செல்கிறது. பாதையில் ஒரு குகையும் இடம்பெற்றுள்ளது.

Remove ads

பச்சைநாயகி

2005 ஆம் ஆண்டில், ஜூலை 6 ஆம் தேதியன்று அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமால் இப்பூங்காவில் நடப்பட்டு வளர்ந்து வரும் மரம் பச்சைநாயகி என்று பெயரிடப்பட்டுள்ளது.

படங்கள்


மேற்கோள்கள்

புற இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads