ஏறுதழுவல்
தமிழரின் பாரம்பரிய விளையாட்டு ( ஜல்லிக்கட்டு) / From Wikipedia, the free encyclopedia
ஏறு தழுவல், மஞ்சு விரட்டு அல்லது சல்லிக்கட்டு (ஜல்லிக்கட்டு) என்பது தமிழர்களின் மரபுவழி விளையாட்டுகளில் ஒன்றாகும். ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். மாட்டை ஓடவிட்டு அதை மனிதர்கள் அடக்குவது, அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவதான விளையாட்டு. சிவகங்கை மாவட்டம் மஞ்சுவிரட்டு "சொர்க்க பூமியாக" கருதப்படுகிறது.தமிழ் நாட்டில் அதிகமாக மஞ்சுவிரட்டு நடைபெறும் மாவட்டமாக சிவகங்கை உள்ளது.
ஏறுதழுவல் விளையாட்டு | |
பிற பெயர்கள் | சல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு |
---|---|
முதலில் விளையாடியது | பொ.ஊ.மு. 2000 |
விளையாட்டைப் பற்றிய குறிப்புகள் | |
இருபாலரும் | இல்லை |
பகுப்பு/வகை | பாரம்பரிய விளையாட்டு |
விளையாடுமிடம் | திறந்த மைதானம் |
தற்போதைய நிலை | |
தாயகம் | தமிழ்நாடு, இந்தியா |
ஒலிம்பிக் | இல்லை |
இணை ஒலிம்பிக் | இல்லை |
தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாகக் கருதப்படும் இவ்விளையாட்டு, மதுரை மாவட்டம் அவனியாபுரம் ,அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு எனும் ஊர்களிலும், திருச்சி பெரிய சூரியூர், நாமக்கல் மாவட்டம் அலங்காநத்தம், சேலம் மாவட்டம் தம்மம்பட்டி , கூலமேடு, தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம், புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை, வேலூர் மாவட்டம் திருவண்ணாமலை மாவட்டம் ஆதமங்கலம் புதூர் மற்றும் தேனீமலை, தேனி மாவட்டம் போன்ற ஊர்களில், ஆண்டுதோறும் தை மாதத்தில் பொங்கல் திருநாளையொட்டி நடத்தப் பெறுகின்றன.
இப்போட்டியில் பங்கேற்கும் போட்டியாளர்கள், போட்டியில் ஆழ்த்தப்படும் விலங்குகள், பார்வையாளர்கள் என அனைத்து தரப்பினருக்கும் இப்போட்டியுடன் தொடர்புடைய காயச் சம்பவங்களும் இறப்புச் சம்பவங்களும் நடந்துள்ளன. இதன் விளைவாக விலங்குரிமை அமைப்புகள் இப்போட்டிக்குத் தடை விதிக்கக் கோரி நீதிமன்றத்தில் முறையிட, நீதிமன்றம் பல முறை இப்போட்டிக்குத் தடை விதித்தது. இருப்பினும், இந்தத் தடைக்கு எதிர்த்து மக்கள் போராடியதன் விளைவாக இப்போட்டி தொடர ஒரு புதிய சட்டம் 2017-இல் இயற்றப்பட்டது.[1]