![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/57/KeeladiExcavationCamp2.jpg/640px-KeeladiExcavationCamp2.jpg&w=640&q=50)
கீழடி அகழாய்வு மையம்
தமிழத்தில் அகழாய்வு நடைபெறும் ஓர் மையம் / From Wikipedia, the free encyclopedia
கீழடி தொல்லியல் களம் (Keezhadi excavation site) என்பது இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தால் அகழாய்வு தொடங்கப்பட்டு, பின்னர் தமிழ் நாடு தொல்லியல் துறையால் செயற்பட்டு வரும் ஒரு சங்க கால வசிப்பிடம் ஆகும். இந்த அகழாய்வு மையம் தமிழ்நாட்டில் மதுரைக்குத் தென்கிழக்கில் 12 கி.மீ தொலைவில், சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம், கீழடி ஊராட்சியில் உள்ள கீழடி கிராமத்தின் பள்ளிச்சந்தைத் திடல் மேட்டுப்பகுதியில் உள்ளது.
கீழடி அகழாய்வுக் களம் | |
---|---|
![]() கீழடி அகழ்வாய்வில் வெளிக்கொணரப்பட்ட கட்டிடத் தொகுதிகள் | |
மாற்றுப் பெயர் | வைகை சமவெளி நாகரிகம் |
இருப்பிடம் | கீழடி, சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா |
பகுதி | திருப்புவனம் |
ஆயத்தொலைகள் | 9.8630727°N 78.1820931°E / 9.8630727; 78.1820931 |
வகை | குடியிருப்புப் பகுதிகள் |
பரப்பளவு | 32.37 ha (80.0 ஏக்கர்கள்) |
வரலாறு | |
கட்டப்பட்டது | கிமு 600– கிமு 500 |
கலாச்சாரம் | சங்க காலம் |
பகுதிக் குறிப்புகள் | |
அகழாய்வு தேதிகள் | 2015-தற்போது வரை |
அகழாய்வாளர் | கி. அமர்நாத் ராமகிருஷ்ணா |
மேலாண்மை | இந்தியத் தொல்லியல் ஆய்வகம், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
பொது அனுமதி | Yes |
ஆதிச்சநல்லூர் தொல்லியல் களத்துக்கு அடுத்து இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தால் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் பெரிய அளவிலான அகழாய்வு இதுவேயாகும். இது வைகை ஆற்றங்கரையில் உருவான தமிழர் பண்பாட்டை வெளிக்கொணர்கிறது. இத்தொல்லியல் களம் சுமார் கிமு 6 ஆம் நூற்றாண்டிற்கும், கிமு 5 ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்திற்குரியது எனக்கணித்துள்ளனர்.[1] இந்த அகழ்வாய்வில் சிந்துவெளி நாகரிகத்திற்கும் தொடர்புள்ளது.[2]