டொலுய்
செங்கிஸ் கான் மற்றும் போர்ட்டேயின் நான்காவது மகன் / From Wikipedia, the free encyclopedia
டொலுய் கான் (அண்.1191 – 1232) என்பவர் ஒரு மங்கோலியக் கான் ஆவார். செங்கிஸ் கான் மற்றும் போர்ட்டேயின் நான்காவது மகன் ஆவார். 1227இல் இவரது தந்தை இறந்தபோது டொலுயின் உளூஸ் அல்லது மரபுவழிப் பிராந்தியமானது மங்கோலியப் பீடபூமியில் இருந்த மங்கோலியத் தாயகத்தைக் கொண்டிருந்தது. ஒக்தாயி பெரிய கானாகப் பதவியேற்கும் வரை ஒரு பிரதிநிதியாக டொலுய் மங்கோலியப் பேரரசை நிர்வகித்தார். டொலுய் அதற்கு முன் சின், சியா மற்றும் குவாரசமிய யுத்தங்களில் சிறப்பாகப் பங்கெடுத்திருந்தார். மேலும் மெர்வ் மற்றும் நிசாபூர் நகரங்களைக் கைப்பற்றுவதில் முக்கியப் பங்காற்றினார். இவரே மங்கோலியா மற்றும் ஈல்கான் பேரரசர்கள் பெரும்பாலானோரின் நேரடி மூதாதையர் ஆவார்.
டொலுய் கான் | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ரசீத்தல்தீன் அமாதனியின் நூலிலுள்ள டொலுய் கானின் ஓவியம், 14 ஆம் நூற்றாண்டின் ஆரம்பம். | |||||||||||||
மங்கோலியப் பேரரசின் பிரதிநிதி | |||||||||||||
ஆட்சிக்காலம் | 25 ஆகத்து 1227 – 13 செப்டம்பர் 1229 | ||||||||||||
முன்னையவர் | செங்கிஸ் கான் | ||||||||||||
பின்னையவர் | ஒக்தாயி கான் சோர்காக்டனி டொலுயிக்கு வழங்கப்பட்ட நிலங்களுக்குத் தலைவியாவார் | ||||||||||||
பிறப்பு | அண்.1191 | ||||||||||||
இறப்பு | 1232 (அகவை 40–41) மங்கோலியப் பேரரசு (தற்கால மங்கோலியா) | ||||||||||||
துணைவர் | சோர்காக்டனி பெகி சருக் கதுன் லிங்குன் கதுன் நயன் கதுன் டொகுஸ் கதுன் | ||||||||||||
குழந்தைகளின் பெயர்கள் | மோங்கே கான் (1209–1259) குப்லாய் கான் (1215–1294) குலாகு கான் (1217–1265) அரிக் போகே (1219–1266) | ||||||||||||
| |||||||||||||
மரபு | போர்சிசின் | ||||||||||||
தந்தை | செங்கிஸ் கான் | ||||||||||||
தாய் | போர்ட்டே உஜின் | ||||||||||||
மதம் | தெங்கிரி மதம் |
டொலுய், ககான் என்ற பட்டத்தைத் தனக்காக என்றுமே பயன்படுத்திக் கொண்டது இல்லை; செங்கிஸ் கானோ அல்லது அவரது பின் வந்த மங்கோலியப் பேரரசின் மூன்று கான்களோ தெற்கிலிருந்த அண்டை நாட்டுச் சீன அரசமரபுகளைப் போல் இராஜ பட்டங்களை என்றுமே பயன்படுத்திக் கொண்டது இல்லை. டொலுய்க்கு ககான் என்ற பட்டம் இவரது மகன் மோங்கேயால் வழங்கப்பட்டது. இவருக்குக் கோயில் பெயரை (சீனம்: 元睿宗; பின்யின்: யுவான் ருயிசோங்; வேட்–கில்சு: ஜுயி-ட்சுங்) சில தசாப்தங்களுக்கு பிறகு யுவான் அரசமரபை நிறுவிய இவரது மற்றொரு மகனான குப்லாய் வழங்கினார்.