![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/9e/YuanEmperorAlbumOgedeiPortrait.jpg/640px-YuanEmperorAlbumOgedeiPortrait.jpg&w=640&q=50)
ஒக்தாயி கான்
மங்கோலியப் பேரரசின் ககான் (அண். 1186-1241) (ஆட்சி 1229-1241) / From Wikipedia, the free encyclopedia
ஒக்தாயி கான்[2][note 3] என்பவர் செங்கிஸ் கானின் மூன்றாவது மகன் ஆவார். இவர் மங்கோலியப் பேரரசின் இரண்டாவது ககான்[note 1] ஆவார். இவர் தனது தந்தைக்குப் பிறகு ஆட்சிக்கு வந்தார். தனது தந்தை தொடங்கி வைத்த பேரரசின் விரிவாக்கத்தை இவர் தொடர்ந்தார். மங்கோலியப் பேரரசு அதன் அதிக பட்ச பரப்பளவை அடைந்தபோது உலகின் முக்கியத் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். மேற்கு மற்றும் தெற்கில் ஐரோப்பா மற்றும் சீனா மீது படையெடுத்தார்.[7] செங்கிஸ் கானின் அனைத்து முதன்மை மகன்களைப் போலவே இவரும் சீனா, ஈரான் மற்றும் நடு ஆசியா மீதான படையெடுப்புகளின்போது முக்கியப் பங்காற்றினார்.
விரைவான உண்மைகள் ஒக்தாயி ககான், மங்கோலியப் பேரரசின் 2வது ககான்-பேரரசர் ...
ஒக்தாயி ககான் | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
| |||||||||
![]() யுவான் அரசமரபின் காலத்தில் வரையப்பட்ட ஒக்தாயி கானின் உருவப்படம். இப்படத்தின் அகலம் 47 செ. மீ. மற்றும் உயரம் 59.4 செ. மீ., பட்டின் மீது வண்ணச் சாயம் மற்றும் மையால் வரையப்பட்டது. இப்போது தேசிய அரண்மனை அருங்காட்சியகம், தாய்பெய், தாய்வானில் அமைந்துள்ளது. | |||||||||
மங்கோலியப் பேரரசின் 2வது ககான்-பேரரசர்[note 1] | |||||||||
ஆட்சிக்காலம் | 13 செப்டம்பர் 1229 – 11 திசம்பர் 1241 | ||||||||
முடிசூட்டுதல் | 13 செப்டம்பர் 1229 அன்று மங்கோலியாவின் கெர்லென் ஆற்றின் கோதூ அராலில் நடந்த குறுல்த்தாய் | ||||||||
முன்னையவர் | |||||||||
பின்னையவர் | |||||||||
பிறப்பு | அண். 1186[note 2] கமக் மங்கோல் | ||||||||
இறப்பு | 11 திசம்பர் 1241 (அகவை 55) மங்கோலியப் பேரரசு | ||||||||
மனைவி |
| ||||||||
குழந்தைகளின் பெயர்கள் |
| ||||||||
| |||||||||
அரசமரபு | போர்சிசின் | ||||||||
தந்தை | செங்கிஸ் கான் | ||||||||
தாய் | போர்ட்டே உஜின் | ||||||||
மதம் | தெங்கிரி மதம் |
மூடு