டொலுய் உள்நாட்டுப் போர்
மங்கோலியப் பேரரசில் 1260-64இல் நடந்த வாரிசுரிமைப் போர் / From Wikipedia, the free encyclopedia
டொலுய் உள்நாட்டுப் போர் என்பது குப்லாய் கான் மற்றும் அவரது தம்பி அரிக் போகேவிற்கு இடையே நடைபெற்ற வாரிசுரிமைச் சண்டையாகும். இப்போர் 1260 முதல் 1264 வரை நடைபெற்றது.[1] மோங்கே கான் 1259ல் இறந்தார். தனக்கு அடுத்த கானாக யாரையும் அவர் அறிவிக்கவில்லை. பிறகு டொலுய் குடும்ப உறுப்பினர்களிடையே ககான் பட்டத்துக்கான போட்டியானது உள்நாட்டுப் போராக மாறியது.[1] இப்போர் மற்றும் இதற்குப் பிந்தைய போர்களான பெர்கே-குலாகு போர் மற்றும் கய்டு-குப்லாய் போர் ஆகியவை மங்கோலியப் பேரரசு மீதான ககானின் ஆளுமையைக் குறைத்தன. பேரரசைத் தன்னாட்சியுடைய கானரசுகளாகப் பிரித்தன.[2]
விரைவான உண்மைகள் டொலுய் உள்நாட்டுப் போர், தேதி ...
டொலுய் உள்நாட்டுப் போர் | |||||||
---|---|---|---|---|---|---|---|
மங்கோலியப் பேரரசின் பிரித்தலின் ஒரு | |||||||
| |||||||
நாடுகள் | |||||||
குப்லாய் கான் மற்றும் அவரது கூட்டாளிகள் | அரிக் போகே மற்றும் அவரது கூட்டாளிகள் | ||||||
மன்னர் மற்றும் தளபதிகள் | |||||||
|
மூடு