தேசிய தலைநகர் பகுதி, தில்லி
From Wikipedia, the free encyclopedia
தேசிய தலைநகர் பகுதி,தில்லி (NCT) இந்தியாவின் ஒரு சிறப்பு ஆட்சிப்பகுதியாகும். இந்த ஆட்பகுதி மூன்று நகரங்களை தன்னகத்தே கொண்டுள்ளது: புது தில்லி, தில்லி மற்றும் தில்லி கண்டோன்மென்ட். இது தவிர கிழக்கு தில்லி மாவட்டம், சதாரா மாவட்டம், தென்மேற்கு தில்லி மாவட்டம், தெற்கு தில்லி மாவட்டம், புது தில்லி மாவட்டம், மத்திய தில்லி மாவட்டம், மேற்கு தில்லி மாவட்டம், வடகிழக்கு தில்லி மாவட்டம் வடக்கு தில்லி மாவட்டம், வடமேற்கு தில்லி மாவட்டம், தென்கிழக்கு தில்லி மாவட்டம் என 11 மாவட்டங்களும்;[8][9] 33 வருவாய் வட்டங்களும்; கணக்கெடுப்பில் உள்ள ஊர்கள் 59 மற்றும் 165 கிராமங்களையும் உள்ளடக்கியது. மூன்று மூன்று மாநகராட்சிகளையும் கொண்டது.
- இது தில்லி மற்றும் புது தில்லியை உள்ளடக்கிய தேசிய தலைநகர் பகுதியினைப் பற்றியதாகும். நீங்கள் தேசிய தலைநகர் வலயம் (இந்தியா), தில்லி அல்லது புது தில்லி காண விரும்பினீர்களா ?
தேசிய தலைநகர் பகுதி | |
---|---|
சின்னம் | |
இந்தியாவில் தேசிய தலைநகர் பகுதியின் அமைவிடம் | |
நாடு | இந்தியா |
பகுதி | வட இந்தியா |
தலைநகரம், தில்லி சுல்தானகம் | 1214 |
தலைநகரம், முகலாயப் பேரரசு | 1526, இடையிடையே ஆக்ரா |
தலைநகரம், பிரித்தானிய இந்தியா | 1911 |
புது தில்லி, தலைநகரம், இந்திய ஒன்றியம் | 1947 |
புது தில்லி, தலைநகரம், இந்தியக் குடியரசு | 26 சனவரி 1950 |
ஒன்றியப் பகுதி[1][2] | 1956 |
தேசிய தலைநகர் பகுதி[3] | 1 பெப்பிரவரி 1992 |
தலைநகரம் | புது தில்லி |
மாவட்டம் | 11 |
அரசு | |
• நிர்வாகம் | தில்லி அரசு |
• துணைநிலை ஆளுநர் | வினை குமார் சக்சேனா[4] |
• முதல்வர் | அரவிந்த் கெஜ்ரிவால் (ஆஆக) |
• சட்டப் பேரவை | தில்லி சட்டமன்றம் ஓரவை (70 உறுப்பினர்கள்) |
• நாடாளுமன்ற தொகுதிகள் |
|
பரப்பளவு | |
• ஒன்றியப் பகுதி | 1,484 km2 (573 sq mi) |
• நீர் | 18 km2 (6.9 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 32வது |
ஏற்றம் | 200–250 m (650–820 ft) |
மக்கள்தொகை (2011)[6] | |
• ஒன்றியப் பகுதி | 1,67,87,941 |
• அடர்த்தி | 11,312/km2 (29,298/sq mi) |
• நகர்ப்புறம் | 1,63,49,831 |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 110000 – 110099 |
தொலைபேசி குறியீடு | +91—11 |
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-DL |
வாகனப் பதிவு | DL |
இணையதளம் | delhi |
நவம்பர் 11,1956 ஆம் ஆண்டில் தில்லி தலைநகரப் பகுதி தனி ஒன்றிய ஆட்சிப்பகுதியாக அமைக்கப்பட்டது. இந்திய அரசியலமைப்பு (அறுபத்தொன்பதாவது திருத்தம்) சட்டம், 1991, தில்லி ஒன்றிய ஆட்சிப்பகுதியை (Union Territory of Delhi), தில்லி தேசிய தலைநகரப் பகுதியாக முறைப்படி அறிவித்தது. இச் சட்டத்தின்படி, இப் பகுதிக்கு முதலமைச்சர் தலமையேற்கும் வரையறுக்கப்பட்ட அதிகாரங்களுடன் கூடிய சட்டசபை ஒன்றும் அமைக்கப்பட்டது. முதல்வராக ஆரவிந்த் கெஜரிவால் அவர்கள் பணியாற்றுகிறார்கள்.
இங்கு ஆட்சியமைப்பு தனித்த இயல்புடையது; மக்களால் தேர்ந்த அரசு மாநகர பொறுப்புகளை கையாள நடுவண் அரசு காவல் மற்றும் பொது நிர்வாகத்தை மேற்கொள்கிறது.
இது தேசிய தலைநகர் வலயம் (இந்தியா)வின் அங்கமாகும்.