பிராங்க் சுவெட்டன்காம்
பிரித்தானிய மலாயா நிர்வாக அமைப்பின் முதல் தலைமை ஆளுநராக 1896-ஆம் ஆண்டில் பதவி வகித்தவர் / From Wikipedia, the free encyclopedia
பிராங்க் சுவெட்டன்காம் அல்லது சர் பிராங்க் அதெல்சுதான் சுவெட்டன்காம் (பிறப்பு: 28 March 1850 – இறப்பு: 11 June 1946); (ஆங்கிலம்: Sir Frank Athelstane Swettenham; மலாய் மொழி: Frank Swettenham; சீனம்: 瑞天咸); என்பவர் மலாயா கூட்டமைப்பு மாநிலங்கள் எனும் பிரித்தானிய மலாயா நிர்வாக அமைப்பின் முதல் தலைமை ஆளுநராக 1896-ஆம் ஆண்டில் பதவி வகித்தவர். மலாயா ஒன்றியம் அமைக்கப் படுவதை எதிர்த்த பிரித்தானிய அதிகாரிகளில் இவரும் ஒருவர்.[1]
விரைவான உண்மைகள் சர்பிராங்க் சுவெட்டன்காம்Frank SwettenhamGCMG CH, தலைமை ஆளுநர் நீரிணை குடியேற்றங்கள் ...
பிராங்க் சுவெட்டன்காம் Frank Swettenham GCMG CH | |
---|---|
பிராங்க் சுவெட்டன்காம் | |
பதவியில் 1925–1938 | |
தலைமை ஆளுநர் நீரிணை குடியேற்றங்கள் | |
பதவியில் 5 நவம்பர் 1901 – 16 ஏப்ரல் 1904 | |
ஆட்சியாளர்கள் | விக்டோரியா; ஜோர்ஜ் VI |
தலைமை ஆளுநர் | |
பதவியில் 1 சூலை 1896 – 4 நவம்பர் 1901 | |
5-ஆவது பிரித்தானிய பேராக் ஆளுநர் | |
பதவியில் 1 சூன் 1889 – 30 சூன் 1896 | |
முன்னையவர் | இயூ லோ |
பின்னவர் | வில்லியம் ஊட் திரேச்சர் |
3-ஆவது பிரித்தானிய சிலாங்கூர் ஆளுநர் | |
பதவியில் செப்டம்பர் 1882 – மார்ச் 1884 | |
2-ஆவது பிரித்தானிய பேராக் ஆளுநர் | |
பதவியில் 5 நவம்பர் 1875 – மார்ச் 1876 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1850-03-28)28 மார்ச்சு 1850 பெல்பர், இங்கிலாந்து |
இறப்பு | 11 சூன் 1946(1946-06-11) (அகவை 96) லண்டன் |
துணைவர் | கான்சுடன்சு சிட்னி ஓல்ம்சு |
வாழிடம்(s) | கார்கோசா ஸ்ரீ நெகாரா, கோலாலம்பூர், மலேசியா |
வேலை | காலனித்துவ அதிகாரி |
மூடு
மலேசிய வரலாற்றில் தடம் பதித்துச் சென்ற மிக முக்கியமான பிரித்தானியர்களில் ஒருவராக பிராங்க் சுவெட்டன்காம் அறியப் படுகிறார். மலேசியா மற்றும் சிங்கப்பூரில் உள்ள பல இடங்களுக்கும்; மற்றும் பல சாலைகளுக்கும் இவரின் பெயர் சூட்டப்பட்டு உள்ளது.