மல்லர் வம்சம்
From Wikipedia, the free encyclopedia
மல்லர் வம்சம் (Malla Dynasty) இமயமலையின் அடிவாரத்தில் அமைந்த நேபாள நாட்டின் காத்மாண்டு சமவெளிப் பகுதிகளை கிபி 1201 முதல் 1769 முடிய ஆட்சி செய்த அரச வம்சமாகும். இவர்களை நேவார் மக்கள் (நேபாள நாட்டவர்) என்றும் அழைப்பர். மல்லர்கள் இந்து சமயத்தைச் சார்ந்தவர்கள்
நேபாள நாட்டு மல்லர்கள் தங்களை மகாஜனபதங்களில் ஒன்றான மல்லர்களின் வழி வந்த சத்திரிய குலத்தவர் என்றும் கூறிக்கொள்கிறார்கள்.[1] மல்லர் என்பதற்கு சமஸ்கிருத மொழியில் மற்போர் செய்பவர்கள் எனப் பொருளாகும். காத்மாண்டு சமவெளியில் மல்ல வம்சத்தவர்கள் காத்மாண்டு, லலித்பூர் மற்றும் பக்தபூர் நகரங்களை தலைநகராகக் கொண்டு அரசாண்டனர்.
மல்லர் மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் நேபாள நாட்டில், குறிப்பாக காத்மாண்டு சமவெளியில் கட்டிடக் கலை செழித்தோங்கியது.