தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி
இலங்கையின் அரசியல் கட்சி / From Wikipedia, the free encyclopedia
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி (Tamil People's National Alliance) என்பது இலங்கைத் தமிழரைப் பிரதிநிதித்துவப் படுத்தும் இலங்கையின் ஓர் அரசியல் கூட்டணிக் கட்சியாகும். இக்கட்சி 2020 பெப்ரவரியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்ற சில தமிழ்த் தேசியக் கட்சிகளால் உருவாக்கப்பட்டது. இக்கூட்டணி இலங்கைத் தேர்தல்கள் ஆணைக்குழுவால் மீன் சின்னத்தைக் கொண்ட அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது.[1]
விரைவான உண்மைகள் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி Tamil People's National Alliance, சுருக்கக்குறி ...
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி Tamil People's National Alliance | |
---|---|
சுருக்கக்குறி | த.ம.தே.கூ (TPNA) |
தலைவர் | க. வி. விக்னேஸ்வரன் |
தலைவர் | சுரேஷ் பிரேமச்சந்திரன் |
பொதுச் செயலாளர் | சிவசக்தி ஆனந்தன் |
தொடக்கம் | 9 பெப்ரவரி 2020 (4 ஆண்டுகள் முன்னர்) (2020-02-09) |
பிரிவு | தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு |
நாடாளுமன்றம் | 1 / 225 |
தேர்தல் சின்னம் | |
மீன் | |
இலங்கை அரசியல் |
மூடு