அய்யம்பேட்டை (தஞ்சாவூர்)

இது ஒரு பேரூராட்சி From Wikipedia, the free encyclopedia

அய்யம்பேட்டை (தஞ்சாவூர்)map
Remove ads

அய்யம்பேட்டை (ஆங்கிலம்:Ayyampettai), என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தின் பாபநாசம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். அய்யம்பேட்டை முன்பு இராமச்சந்திரபுரம் என்று அறியப்பட்டது. இங்கு அதிகம் சௌராட்டிர மக்களும், பட்டு சாலியர்களும், இசுலாமியர்களும் வாழ்கிறார்கள். நெசவுத் தொழில் அதிக அளவில் புழக்கத்தில் உள்ளது. இங்கு இரயில் நிலையம் ஒன்றும், பழமையான பள்ளியும் உள்ளன.

விரைவான உண்மைகள்

அய்யம்பேட்டை பேரூராட்சியில் பிரசன்ன ராஜகோபாலசாமி திருக்கோவிலில் ஆண்டு தோறும் தேரோட்டம் நடைபெற்று வருகிறது. மேலும் ஸ்ரீ சக்கரவாக்கீஸ்வரர் சுவாமி கண்ணாடி பல்லக்கில் ஏழு ஊர் சுற்றி வலம்வரும் சப்தஸ்தான திருவிழாவில் அய்யம்பேட்டை நகரில் பூச்சொரிதல் விழா ஆண்டு தோறும் நடைபெறுகிறது.

Remove ads

அமைவிடம்

அய்யம்பேட்டை பேரூராட்சிக்கு கிழக்கே கும்பகோணம் 24 கி.மீ.; மேற்கே தஞ்சாவூர் 15 கி.மீ. தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

7.73 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 186 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி பாபநாசம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4,106 வீடுகளும், 16,263 மக்கள்தொகையும் கொண்டது. [4] [5]

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 10.9°N 79.18°E / 10.9; 79.18 ஆகும்.[6] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 28 மீட்டர் (91 அடி) உயரத்தில் இருக்கின்றது.

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads