ஆசாத் காஷ்மீர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆசாத் ஜம்மு காஷ்மீர் மாநிலம் (Azad State of Jammu and Kashmir), பாகிஸ்தானின் ஓர் தனியாட்சி மாநிலமாகும். இதன் தலைநகரம் முசாஃபராபாத். பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள இதனை இந்தியா உரிமை கொள்கிறது. இந்தியாவின் இப்பகுதி பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் என்று குறிப்பிடப்படுகிறது.
Remove ads
வரலாறு
1947 இந்திய-பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்னர் ஆசாத் காஷ்மீரின் பகுதிகள் அன்றைய ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தின் கீழ் இருந்தது. இந்தியா 15 ஆகஸ்டு 1947 அன்று விடுதலை அடைந்த போது, பாகிஸ்தானும் தனி நாடாக மாறியது. பாகிஸ்தான் இராணுவம் பழங்குடி மக்களைக் கொண்டு ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தின் கில்ஜித்-பல்டிஸ்தான் மற்றும் ஆசாத் காஷ்மீரின் நிலங்களை ஆக்கிரமித்துக் கொண்டது. இதனால் 1947-1948 இந்திய-பாகிஸ்தான் போர் ஏற்பட்டது. 1972ஆம் ஆண்டில் ஏற்பட்ட சிம்லா ஒப்பந்தப்படி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் இந்தியா இடையே எல்லைக் கட்டுப்பாட்டு கோடு ஏற்கப்பட்டது.
Remove ads
மக்கள் தொகை பரம்பல்
2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 13,297 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட ஆசாத் ஜம்மு காஷ்மீரின் மக்கள் தொகை 40,45,366 ஆகும். மக்கள்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பளவில் சராசரி 304.2 பேர் வாழ்கின்றனர. ஆண்டு மக்கள்தொகை வளர்ச்சி மாற்றம் 1.63% ஆக உள்ளது.[4]
இதனையும் காண்க
குறிப்புகள்
உசாத்துணை
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads