ஆயிலம் ஊராட்சி
இது தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் உள்ளது From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆயிலம் ஊராட்சி (Ayilam Gram Panchayat), தமிழ்நாட்டின் இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு வட்டாரத்தில் அமைந்துள்ளது.[3][4] இந்த ஊராட்சி, இராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்கும் அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [5] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 3543 ஆகும். இவர்களில் பெண்கள் 1758 பேரும் ஆண்கள் 1785 பேரும் உள்ளனர்.
Remove ads
அடிப்படை வசதிகள்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[5]
Remove ads
சிற்றூர்கள்
இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[6]:
- மாலைமேடு
- ஆயிலம்புதூர் இருளர் காலனி
- ராமாபுரம் கொல்லைமேடு
- சிகாரி காலனி
- ஆயிலம் ஆ.தி.காலனி
- ஆயிலம்புதூர்
- ஆயிலம்
- கவரபாளையம்
- கவரபாளையம் அ.காலனி
- ராமாபுரம்
தொன்ம வரலாறும் பெயர்க் காரணமும்
கோகுலம் என்ற சொல்லின் மறுவடிவமாக ஆயிலம் என்று வழங்கப்படுகிறது.
பழங்காலத்தில் இப்பகுதி குறும்பர்கள் பிறகு சோழர்கள், பல்லவர்கள் ஆளுகையில் மேய்ச்சல் நில வனப்பகுதியாக இருந்ததுள்ளது.
பிறகு இதனை 'அழகிய சேனன்' 'அஞ்சாத கண்டன்' என்னும் பாளையக்காரர்கள் "அழகிய சேனன் கோட்டை" என்ற பட்டிணம் கட்டிக்கொண்டு காடு வளர்த்து ஆண்டுள்ளனர் அக்காலத்தில் ஆற்காடு வேலூர் ஆரணி என்ற ஊர்களில் கோட்டைகள் கட்டப்பெற்றிருக்க வில்லை அவை காலத்தால் இதற்கு பிந்தையவை.
இவ்விடத்தே (அருங்குன்றம்) பரமேசுவரர் பருவத வடிவில் இருந்து நால்யுகமாக அனைத்து உயிர்களுக்கும் அருள் புரிவதாகவும் அதற்கு குலோத்துங்க சோழன் முதலான அரசர்கள் வீரவினோதீசுவரர் என்ற பெயரில் கோயில் கட்டி விழாவும் எடுத்துள்ளனர். அக்கிரகாரத்தின் வடக்கில் பெருமாள் கோயிலும் அப்பருவதம் அருகே சுப்பிரமணியர் தளமும் இருந்துள்ளது போன்ற பல தகவல்களை அழகிய சேனன் அஞ்சாத கண்டன் கைபீயத்து மற்றும் அரகிரிபருவதக் கைபீயத்து முலம் அறிய முடிகிறது.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads