இராணிப்பேட்டை மாவட்டம்

தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்று From Wikipedia, the free encyclopedia

இராணிப்பேட்டை மாவட்டம்map
Remove ads

இராணிப்பேட்டை (Ranipet District) என்பது இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் இராணிப்பேட்டை ஆகும். இராணிப்பேட்டை மாவட்டம், 2019-ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 15-ஆம் தேதி வேலூர் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது.[1][2] தமிழ்நாட்டின் 36-ஆவது மாவட்டமாக, இம்மாவட்டத்தை 28 நவம்பர் 2019 அன்று தமிழக முதல்வர் முறைப்படி இராணிப்பேட்டையில் துவக்கி வைத்தார்.[3]

இராணிப்பேட்டை மாவட்டம்
மாவட்டம்
Thumb
Thumb
பாறையில் செதுக்கப்பட்ட மகேந்திரவாடி கோயில்,
டெல்லி நுழைவாயில்
Thumb
இராணிப்பேட்டை மாவட்டம்:அமைந்துள்ள இடம்
Thumb
இராணிப்பேட்டை மாவட்டம்
ஆள்கூறுகள்: 12°56′01″N 79°20′28.9″E
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
தலைநகரம் இராணிப்பேட்டை
பகுதி வட மாவட்டம்
ஆட்சியர்
மரு. சந்திரகலா,
இ. ஆ. ப
காவல்துறைக்
கண்காணிப்பாளர்

திரு. விவேகானந்தா
சுக்லா, இ. கா. ப.
நகராட்சிகள் 6
வருவாய் கோட்டங்கள் 2
வட்டங்கள் 6
உள்வட்டங்கள் 18
பேரூராட்சிகள் 8
ஊராட்சி ஒன்றியங்கள் 7
ஊராட்சிகள் 288
வருவாய் கிராமங்கள் 330
சட்டமன்றத் தொகுதிகள் 4
மக்களவைத் தொகுதிகள் 1
பரப்பளவு மொத்தம்: 2234.32 ச. கி. மீ.
மக்கள் தொகை
(2011)
மொத்தம்:12,10,277
அலுவல்
மொழி(கள்)

தமிழ்
நேர வலயம்
இசீநே
(ஒசநே+5:30)
அஞ்சல் குறியீடு
632 xxx
தொலைபேசிக்
குறியீடு

04172
வாகனப் பதிவு
TN-73
இணையதளம் ranipet
Remove ads

மாவட்ட எல்லைகள்

இராணிப்பேட்டை மாவட்டத்தின் தெற்கே திருவண்ணாமலை மாவட்டம், கிழக்கே காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் திருவள்ளூர் மாவட்டமும், மேற்கே வேலூர் மாவட்டம் மற்றும் வடக்கே ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மாவட்டமும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.

மாவட்ட நிர்வாகம்

இராணிப்பேட்டை மாவட்டம் இராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் என என 2 வருவாய் கோட்டங்களும், 6 வருவாய் வட்டங்களும், 18 குறுவட்டங்களும், 330 வருவாய் கிராமங்களும் கொண்டுள்ளது.[4] [5] [6]

வருவாய் வட்டங்கள்

  1. அரக்கோணம் வட்டம்
  2. வாலாஜா வட்டம்
  3. நெமிலி வட்டம்
  4. ஆற்காடு வட்டம்
  5. கலவை வட்டம்
  6. சோளிங்கர் வட்டம்

உள்ளாட்சி நிர்வாகம்

இம்மாவட்டம் 6 நகராட்சிகளையும், 8 பேரூராட்சிகளையும்[7], 7 ஊராட்சி ஒன்றியங்களையும் மற்றும் 288 கிராம ஊராட்சிகளையும் கொண்டுள்ளது.[8]

நகராட்சிகள்

  1. அரக்கோணம்
  2. ஆற்காடு
  3. இராணிப்பேட்டை
  4. வாலாஜாபேட்டை
  5. மேல்விஷாரம்
  6. சோளிங்கர்

பேரூராட்சிகள்

  1. கலவை
  2. காவேரிப்பாக்கம்
  3. நெமிலி
  4. திமிரி
  5. பனப்பாக்கம்
  6. தக்கோலம்
  7. விளாப்பாக்கம்
  8. அம்மூர்

ஊராட்சி ஒன்றியங்கள்

  1. அரக்கோணம் ஊராட்சி ஒன்றியம்
  2. வாலாஜாபேட்டை ஊராட்சி ஒன்றியம்
  3. நெமிலி ஊராட்சி ஒன்றியம்
  4. ஆற்காடு ஊராட்சி ஒன்றியம்
  5. திமிரி ஊராட்சி ஒன்றியம்
  6. சோளிங்கர் ஊராட்சி ஒன்றியம்
  7. காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம்
Remove ads

மக்கள் தொகை


<div class="transborder" style="position:absolute;width:100px;line-height:0; <div class="transborder" style="position:absolute;width:100px;line-height:0;


Thumb

மதவாரியான கணக்கீடு (2011)

  மற்றவை (0.01%)

2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி, ​​இராணிப்பேட்டை மாவட்டத்தின் மக்கள் தொகை 1,210,277 ஆகும். இராணிப்பேட்டை மாவட்டத்தில் 1000 ஆண்களுக்கு 1007 பெண்கள் என்ற பாலின விகிதம் உள்ளது. மக்கள் தொகையில் 39.97% பேர் நகர்ப்புறங்களில் வாழ்கின்றனர். பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் முறையே மக்கள் தொகையில் 23.63% மற்றும் 0.9% ஆவர்.[9]

இம்மாவட்டத்தில் பெரும்பான்மையாக இந்துக்கள் உள்ளனர், மக்கள் தொகையில் 90% பேர் இவர்கள் உள்ளனர். இசுலாமியர்கள் சுமார் 7% பேரும், கிறிஸ்தவர்கள் 2% பேரும் உள்ளனர். பெரும்பான்மையான இசுலாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மாவட்டத்தின் நகர்ப்புறங்களில் வாழ்கின்றனர்.[10]




Thumb

இராணிப்பேட்டை மாவட்டத்தில் பேசப்படும் மொழிகள் (2011)[11]

  தமிழ் (85.95%)
  உருது (6.01%)
  மற்றவை (1.29%)

தமிழ் பெரும்பான்மையான மொழியாகும், இது 85.95% மக்களால் பேசப்படுகிறது. தெலுங்கு 6.75% மக்களாலும், உருது 6.01% மக்களாலும் பேசப்படுகிறது.[11]

அரசியல்

சட்டமன்றம்

இம்மாவட்டம் அரக்கோணம், ஆற்காடு, இராணிப்பேட்டை மற்றும் சோளிங்கர் என 4 சட்டமன்றத் தொகுதிகளை கொண்டுள்ளது.

மேலதிகத் தகவல்கள் வ. எண், சட்டமன்றத் தொகுதி ...

மக்களவை

இம்மாவட்டப் பகுதிகள் அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் உள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி ஆகிய சட்டமன்றத் தொகுதிகள், அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் அடங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

மேலதிகத் தகவல்கள் வ. எண், மக்களவைத் தொகுதி ...
Remove ads

தொழில்கள்

இராணிப்பேட்டை, தென்னிந்தியாவின் ஒரு தொழில்துறை மையமாகும். தோல் மற்றும் தோல் பொருட்கள் காலணிகள், ஆடைகள் போன்றவற்றை ஏற்றுமதி செய்யப்படுகிறது பல பெரிய மற்றும் நடுத்தர தோல் தொழில்கள் உள்ளன. இராணிப்பேட்டையில் மற்ற சிறிய அளவிலான தொழில்கள் உள்ளன, அவை பெரும்பாலும் இரசாயன, தோல் மற்றும் கருவி தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. இந்தத் தொழில்களே நகரத்தின் முக்கிய தொழிலாக உள்ளது.

வழிபாட்டுத் தலங்கள்

லெட்சுமி நரசிம்மர் பெருமாள் கோவில், சோளிங்கர் - இராணிப்பேட்டையில் இருந்து சுமார் 30 கி.மீ. தூரத்தில் உள்ளது. பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 65 வது திவ்ய தேசம் இத்தலத்தில் நரசிம்மரும், ஆஞ்சநேயரும் யோகாசனத்தில் அமர்ந்திருப்பது சிறப்பு. சிம்ஹ கோஷ்டாக்ருதி விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார். மலைக்கோயிலின் நீளம் 200 அடி அகலம் 150 அடி ஏறத்தாழ 1 ஏக்கர் பரப்பு 750 அடி உயரத்தில், சுமார் 1305 படிக்கட்டுகளோடு மலைமீது அமைந்துள்ளது. இங்கு பெரிய மலை, சிறிய மலை என இரண்டு மலைகள் உள்ளன.

இரத்னகிரி பாலமுருகன் கோயில், வேலூரிலிருந்து சுமார் 15 கி.மீ தூரத்தில் திருமணிக்குன்றம் அருகே உள்ள ஒரு பழமையான முருகன் கோயில் ஆகும். இது 14-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இக்கோயில் மலை உச்சியில் அமைந்துள்ளது.

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads