ஆர்யமாலா
1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆர்யமாலா (Aryamala) 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். எம். ஸ்ரீராமுலு நாயுடு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. யு. சின்னப்பா, டி. எஸ். பாலையா, என். எஸ். கிருஷ்ணன், எம். ஆர். சந்தானலட்சுமி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1] ஆரியமாலா திரைப்படம் பெரும் வெற்றி பெற்று சின்னப்பாவை ஒரு பெரும் திரைப்பட நாயகனாக்கியது. இதே நாட்டுப்புறப் புராணக்கதை 1958-இல் காத்தவராயன் என்ற தலைப்பில் மீண்டும் தயாரிக்கப்பட்டது.
Remove ads
திரைக்கதை
வேட்டையாடுபவர்களால் வளர்க்கப்பட்ட காத்தவராயன் என்ற மூன்றாவது மகனை சிவபெருமான் உருவாக்குகிறார் என்பது ஒரு நாட்டுப்புற புராணம். காத்தவராயன் இளங்கன்னி என்ற வானளாவிய பெண்ணைக் காதலிக்கிறான். காத்தவராயன் அவளைக் காதலிக்க முயலும்போது, அவள் நீரில் மூழ்கிவிடுகிறாள். ஆனால் அவள் மீண்டும் ஆர்யமாலா என்ற பெயரில் இளவரசியாகப் பிறந்தாள். காத்தவராயன் ஆர்யமாலாவைக் காதலிக்கிறான். அவன் தனது வடிவத்தை உயிரினங்களாக மாற்றப் பல தந்திரங்களை முயற்சிக்கிறார். ஒருமுறை அவன் கிளியாக மாறி அவள் அரண்மனைக்குச் செல்கிறான். அவள் கிளியை விரும்புகிறாள். ஆனால் அவன் தனது வழக்கமான வடிவத்தை எடுத்து, அவள் தூங்கும் போது ஆர்யமாலாவுக்கு முடிச்சு போடுகிறான். அதிர்ச்சியடைந்த ஆர்யமாலா, மீண்டும் நீரில் மூழ்க முயன்றாள். ஆனால் விட்டுணு அவளைக் காத்தருள்கிறார். காத்தவராயன் அரசனால் சிறையில் அடைக்கப்பட்டான். இருப்பினும், விட்டுணு தலையிட்டு எல்லாவற்றையும் சுமுகமாகத் தீர்த்து வைக்கிறார். காத்தவராயனும் ஆர்யமாலாவும் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.[1]
Remove ads
பாத்திரங்கள்
பின்வரும் பட்டியல் திரைப்படத் தலைப்பில் இருந்தும், பாட்டுப் புத்தகத்தில் இருந்தும் எடுக்கப்பட்டது.[2]
|
|
Remove ads
பாடல்கள்
சி. இலட்சுமணதாஸ் இயற்றிய பாடல்களுக்கு ஜி. ராமநாதன் இசையமைத்திருந்தார். பாடல்கள் RCA Photophone இல் பதிவு செய்யப்பட்டது. பின்வரும் பட்டியல் ஆர்யமாலா பாட்டுப் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது.[2]
வெளியீடு
ஆரியமாலா 1941 அக்டோபர் 19 அன்று சென்னை நாராயணன் & கம்பனியினால் வெளியிடப்பட்டது.[3]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads