இரண்டாம் பிருதிவிதேவன்

இரத்தினபுரி காலச்சூரி மன்னன் From Wikipedia, the free encyclopedia

Remove ads

பிருத்வி-தேவன் ( Prithvi-deva II) இன்றைய இந்திய மாநிலமான சத்தீசுகரை கிபி 1135-1165 வரை ஆட்சி செய்த[1] இரத்தினபுரி காலச்சூரி மன்னர்களில் மிகவும் சக்திவாய்ந்தவராவார்.

விரைவான உண்மைகள் இரண்டாம் பிருதிவிதேவன், இரத்தினபுரி காலச்சூரி வம்சத்தின் 7வது மன்னன் ...
Remove ads

ஆட்சி

இவரது தந்தையும் புகழ்பெற்ற அரசனுமான இரண்டாம் இரத்னதேவன், கீழைக் கங்க மன்னன் அனந்தவர்மன் சோடகங்கனை தோற்கடித்தார். இவரும் கீழைக் கங்க அரசனான ஏழாம் கர்மதேவனைத் தோற்கடித்தார்.[2] கர்மதேவன் இவருக்கு எதிராக ஒரு மோசமான தோல்வியை சந்தித்தார். [3] திரிபுரியின் காலச்சூரி மன்னன், செயசிம்மன், இவர் மீது தனது அதிகாரத்தை நிலைநாட்ட முயன்று தோல்வியடைந்தார்.[4] சிவ்ரிநாராயணன் என்ற இடத்தில் ஒரு போர் நடந்தது. அதில் செயசிம்மன் தோல்வியடைந்ததாகத் தெரிகிறது.[4]

Remove ads

பிருத்விதேவனின் பிலாய்கர் செப்புத் தகடுகள்

மத்தியப் பிரதேசத்தில் இருந்த சத்தீசுகர் பிரிவின் ராய்ப்பூர் மாவட்டத்தின், முன்னாள் பிலாய்கர் ஜமீந்தாரியின் தலைமை நகரமான பிலாய்கரில் 1945இல் இரண்டு செப்புத் தகடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதில் இவரைப் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன.[5]

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads