இலங்கை மாகாணசபைத் தேர்தல்கள் 2008-2009
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இலங்கையின் ஒன்பது மாகாணசபைகளுக்கான உறுப்பினர்களை தெரிவுச் செய்யும் இலங்கை மாகாணசபைத் தேர்தல்கள் 2008-2009 பல படிநிலைகளில் நடைபெற்றது. பொதுவாக நாடு முழுவதுமான தேர்தல்கள் ஒரே நாளில் நடைபெற்றாலும் இம்முறை வழமைக்கு மாறாக நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் தேர்தல்கள் வெவ்வேறு நாட்களில் நடைபெற்றது. இது வரை 6 மாகாணசபைக்களுக்கான தேர்தல்கள் முடுவுற்றுள்ளதோடு ஏனைய இரண்டு மாகாணசபைத்தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளன. ஒவ்வொரு மாகாணசபையும் 5 ஆட்சிக் காலத்துக்கு தெரிவுச் செய்யப்படுவதோடு அதன் அவைத்தலைவர் தேர்வுச் செய்ய்யப்பட்ட அவை அனக்கத்தவரிடமிருந்து தெரிவுச் செய்யப்படுவார்.
முதலாவதாக கிழக்கு மாகாணசபைத் தேர்தல் 2008 மே 10 ஆம் நாள் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து 2008 ஆகஸ்டு 23 ஆம் நாள் வடமத்திய, சபரகமுவா மாகாணசபைகளுக்கான தேர்தல்கள் நடைபெற்றன. 2009 பெப்ரவரி 14 ஆம் நாள் மத்திய மாகாணசபைக்கும் வடமேற்கு மாகாணசபைக்குமான தேர்தல்களும் ஏப்ரல் 24 ஆம் நாள் மேல்மாகாணசபைக்கான தேர்தல்களும் நடைபெற்றன. 2009 ஆகத்து மாதத்தில் ஊவா மாகாணசபைக்கான தேர்தல்களும், 2009 அக்டோபரில் தென் மாகாணசபைக்கான தேர்தலும் நடைபெற்றன.
இத்தேர்தல்கள் இலங்கை சனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் முன்னெடுக்கப்பட்ட உள்நாட்டுப் போரிற்கான மக்கள் கருத்தறியும் களமாகவே பெரும்பாலும் பார்க்கப்பட்டது.[1] இது வரை நடைபெற்ற எல்லாத் தேர்தல்களிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றியைப் பெற்றுள்ளது.[2][3]
Remove ads
கிழக்கு மாகாணசபைத் தேர்தல்
Remove ads
வடமத்திய, சபரகமுவா மாகாணசபைத் தேர்தல்
Remove ads
மத்திய, வடமேற்கு மாகாணசபைத் தேர்தல்
மேற்கு மாகாணசபைத் தேர்தல்
இலங்கையில் மேற்கு மாகாணங்களுக்கான 102 மாகாணசபை உறுப்பினர்களை தேர்தெடுப்பதற்கான தேர்தல் 25 ஏப்ரல், 2009 சனிக்கிழமை இடம்பெற்றது.1989ம் ஆண்டில் 13ம் திருத்தசட்டத்தின் மூலம் அமுல்படுத்தப்பட்ட மாகாணசபை நடைமுறையின் பின்னர் மேற்கு மாகாணத்தில் இடம்பெறும் 5 வது தேர்தலாகும். கொழும்பு,கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதியே மேற்கு மாகாணம் அல்லது மேல் மாகாணம் ஆகும்.
- உ.எண் - தேர்ந்தெடுக்கப்படும் மாகாணசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை
- தே.தொகுதி - தேர்தல் தொகுதி
- கி.பிரிவு - கிராமசேவகர் பிரிவு
- வா.நிலையம் - வாக்களிப்பு நிலையங்களின் எண்ணிக்கை
Remove ads
பங்கு பற்றிய பிரதான கட்சிகள்
- ஐக்கிய தேசியக் கட்சி
- ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
- மக்கள் விடுதலை முன்னணி
- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
- இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்
- மலையக மக்கள் முன்னணி
- மேல்மாகாண மக்கள் முன்னணி
- புதிய இடதுசாரி முன்னணி
- ஜனநாயக ஐக்கிய முன்னணி
ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து மேல்மாகாண மக்கள் முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்(கொழும்பு மாவட்டம் தவிர)போட்டியிடுகின்றது.*ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி ஆகியனவும் போட்டியிடுகின்றன.
102 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்ற்கான இத் தேர்தலில் 38 அரசியல் கட்சிகளிலிருந்தும்,23 சுயேச்சை குழுக்களிலிருந்து 2378 பேர் போட்டியிடுகின்றனர்
Remove ads
தேர்தல் முடிவுகள்
மாவட்டரீதியாக கட்சிகள் பெற்ற ஆசனங்கள்
Remove ads
ஊவா மாகாணசபைத் தேர்தல்
தவணைக்காலம் முடியுமுன்னதாகவே 2009 மே 29 ஆம் நாள் ஊவா மாகாணசபை ஆளுனர் நந்தா மத்தியூவால் கலைக்கப்பட்டது.[4] ஆகஸ்டு மாதமே சபையின் தவணைக்காலம் முடிவடைய இருந்தது.[5] இதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையாளர் பதுளை மாவட்டத்தில் 21வரையும், மொனறாகலை மாவட்டத்தில் 11வரையும் தெரிவுச்செய்யும் வகையில், 2009 சூன் 17 தொடக்கம் 23 வரை வேட்புமனுக்கள் தாக்கல் செய்யலாம் என அறிவித்தார்.[6] வேட்பு மனுகையளிப்பு முடிவுற்ற நிலையில் 2009 ஆகத்து 8 ஆம் நாள் தேர்தல் இடம்பெற்றது.[7]
5வது ஊவா மாகாண சபைக்கான தேர்தல் முடிவுகள்:
Remove ads
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads