எங்க ஊரு பாட்டுக்காரன்

கங்கை அமரன் இயக்கத்தில் 1987 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

எங்க ஊரு பாட்டுக்காரன்
Remove ads

எங்க ஊரு பாட்டுக்காரன் (enga ooru paattukkaaran) 1987-இல் வெளியான தமிழ் நாடகத் திரைப்படமாகும். கங்கை அமரன் இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார். ராமராஜன், ரேகா, சாந்திபிரியா ஆகியோர் முன்னணிக் கதாபாத்திரங்களிலிலும் செந்தாமரை, வினுச்சக்கரவர்தி, செந்தில், கோவை சரளா, எஸ். எஸ். சந்திரன் ஆகியோர் நடித்திருந்தனர். கல்யாணி முருகன் இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார். இசைஞானி இளையராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். மேலும் ஏப்ரல் 14, 1987இல் வெளியிடப்பட்டுள்ளது. இத்திரைப்படம் பெரும் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.[1][2][3][4]

விரைவான உண்மைகள் எங்க ஊரு பாட்டுக்காரன், இயக்கம் ...
Remove ads

கதைச்சுருக்கம்

செண்பகம் (நிசாந்தினி) பணக்காரரின் (சீமதுரை) மகளாவாள். சீதன் பால்கறக்கும் அனாதை ஆவான். இவ்விருவரும் ஒருவரை ஒருவர் காதல் கொள்கின்றனர். ஆனால் இவ்விருவரும் அவர்களுக்குள் இருக்கும் காதலை நேரடியாக வெளிக்காட்டவில்லை. சீதனை, மருதமுத்து (வினுச்சக்கரவர்தி) வளர்த்து வந்தார். செண்பகத்தின் தந்தை அவளுக்கு திருமண ஏற்பாடு செய்யும் போது செண்பகம் தற்கொலை செய்து விடுகிறாள். செண்பகத்தின் மரணத்தை சீதனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. மருதமுத்து சீதனுக்கு காவேரி (ரேகா) எனும் பெண்ணுடன் திருமணம் செய்து வைக்கிறார். சீதன் திருமணம் செய்தாலும் அவனுக்கு செண்பகத்தை மறக்க முடியவில்லை.

Remove ads

நடிகர்கள்

Remove ads

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் வரிகளை கங்கை அமரன் எழுதியுள்ளார்.[5][6][7] மனோ அனைத்துப் பாடல்களையும் பாடியுள்ளார்.

மேலதிகத் தகவல்கள் பாடல்கள், # ...

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads