எம். கே. ஆத்மநாதன்

தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர், பாடலாசிரியர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

எம். கே. ஆத்மநாதன் (இறப்பு: சூலை 15, 2013, அகவை 88) தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளரும், பாடலாசிரியரும் ஆவார். 120-இற்கும் மேற்பட்ட பாடல்களை இயற்றியுள்ளார். 20 படங்களுக்கு இசையமைத்துள்ளார். கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றிருக்கிறார்.'ரத்தபாசம்’ படத்தில் 'பாதகம் செய்வது ஏனோ? ரத்தபாசம் அழிப்பது ஏனோ?’ பாடல் மூலம் திரைப்படங்களில் பாடலாசிரியராக அறிமுகமானார். மல்லிகா’, 'நாடோடி மன்னன்’, 'களத்தூர் கண்ணம்மா’, 'அல்லி’, 'விக்ரமாதித்யன்’, 'மகேஸ்வரி’, 'எதையும் தாங்கும் இதயம்’ உள்பட 75 திரைப்படங்களுக்கு மேல் பாடல் எழுதியிருக்கிறார். 1978-இல் தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றார்.

Remove ads

எழுதிய சில பாடல்கள்

  • தேன் உண்ணும் வண்டு மாமலரைக் கண்டு .. திரிந்தலைந்து பாடுவதேன் ரீங்காரம் கொண்டு (அமரதீபம்)
  • விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே,
  • ஆண்டவன் ஒருவன் இருக்கிறான்
  • தடுக்காதே என்னை தடுக்காதே
  • குற்றால அருவியிலே குளித்தது போல் இருக்குதா
  • வண்ண மலரோடு கொஞ்சும் - நாட்டுக்கொரு நல்லவள் 1959 - சீர்காழி + பி.சுசீலா - இசை :மாஸ்டர் வேணு
  • ஆனந்த நிலை பெறுவோம் - ராஜா ராணி (1956)
  • வெண்முகிலே கொஞ்சநேரம் நில்லு - விக்ரமாதித்தன்
  • நீல வண்ணக் கண்ணனே- மல்லிகா (1957)[1]

இசையமைப்பாளராக

பாடலாசிரியராக

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads