புதையல் (1957 திரைப்படம்)

கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் 1957 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

புதையல் (1957 திரைப்படம்)
Remove ads

புதையல் (Pudhaiyal) 1957-இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மு. கருணாநிதி திரைக்கதை வசனம் எழுதிய[1] இப்படத்தை கிருஷ்ணன்-பஞ்சு இயக்கியிருந்தார். இதில் சிவாஜி கணேசன் மற்றும் பத்மினி போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். 10 மே 1957 ல் இப்படம் வெளிவந்தது.[2] [3] இப்படம் வசூல் ரீதியாக வெற்றியடையவில்லை.

விரைவான உண்மைகள் புதையல், இயக்கம் ...
Remove ads

திரைக்கதை

புதையல் வெள்ளையம்பலம் (டி. எஸ். பாலையா) ஒரு கிணற்றில் புதைக்கப்பட்ட கற்பனைத் தங்கத்தை அடைய விரும்பியதைப் பற்றிய கதை ஆகும். பத்மினியும் சிவாஜியும் இலங்கையில் உள்ள அவரது தந்தை (எம். கே. ராதா) தனது தாயின் கொலையில் எப்படி சம்பந்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பதைப் பற்றிப் பேசுகிறார்கள். பத்மினியும் அவளுடைய சகோதரி தங்கமும் இந்தியாவுக்கு வருகிறார்கள், அங்கு சகோதரி இறந்துவிடுகிறார். அவள் நீரில் மூழ்கி இறந்தாள், அவள் உடல் மணலுக்கு அடியில் கிடந்தது என்று நம்பப்படுகிறது. வெள்ளையம்பலம் ‘தங்கம்’ என்ற சொல்லை ஒற்றுக் கேட்டு, அங்கு ஒரு செல்வம் புதைக்கப்பட்டுள்ளதாக நம்புகிறார்.

Remove ads

நடிகர்கள்

தயாரிப்பு

புதையல் திரைப்படத்தின் முக்கிய காட்சிகள் நியூட்டோன், ரேவதி கலையகங்களில் தயாரிக்கப்பட்டது. "விண்ணோடும் முகிலோடும்" என்ற பாடல் எலியட்ஸ் கடற்கரையில் படமாக்கப்பட்டது.[4]

பாடல்கள்

பாடல்களுக்கு விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையமைத்திருந்தனர்.[5] மகாகவி பாரதியார், தஞ்சை இராமையாதாஸ், அ. மருதகாசி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், எம். கே. ஆத்மநாதன் பாடல் வரிகளை எழுதியிருந்தனர்.[6]

மேலதிகத் தகவல்கள் எண்., பாடல் ...
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads