எருமைப்பட்டி
இது தமிழகத்தில் நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் பேரூராட்சி ஆகும் From Wikipedia, the free encyclopedia
Remove ads
எருமைப்பட்டி (ஆங்கிலம்:Erumaipatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் சேந்தமங்கலம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இது நாமக்கலில் இருந்து துறையூர் செல்லும் வழியில் உள்ளது. இப்பேரூராட்சி பகுதியில் அன்னை மாதம்மாள் ஷீலா பொறியியல் கல்லுரி அமைந்துள்ளது. இது வேளாண்மை நிறைந்த ஊர் பகுதியாகும்
Remove ads
அமைவிடம்
நாமக்கல் - துறையூர் செல்லும் சாலையில், நாமக்கல்லிருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ளது. இதன் கிழக்கில் துறையூர் 41 கி.மீ.; வடக்கில் இராசிபுரம் 45 கி.மீ.; தெற்கில் தொட்டியம் 29 கி.மீ. தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
16.4 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 60 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி சேந்தமங்கலம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,954 வீடுகளும், 12,085 மக்கள்தொகையும் கொண்டது.[4]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads