கடம்பூர்
தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒரு பேரூராட்சி From Wikipedia, the free encyclopedia
Remove ads
கடம்பூர் (ஆங்கிலம்:Kadambur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
கடம்பூர் பேரூராட்சி கடம்பூர்,சிவலிங்கபுரம், சங்கரப்பேரி (எ) கோடங்கால், சங்கரப்பேரிகாலனி, தங்கம்மாள்புரம், தங்கம்மாள்புரம்காலனி ஆகிய கிராமங்களை உள்ளடக்கியது.
14.53 சகி.மீ. பரப்பும், 12 வார்டுகளும், 74 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி கோவில்பட்டி (சட்டமன்றத் தொகுதி)க்கும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1,209 வீடுகள் கொண்ட இப்பேரூராட்சியின் மக்கள்தொகை 4,155 ஆகும்[5][6]
தூத்துக்குடியிலிருந்து 40 கி.மீ. தொலைவிலும், கோவில்பட்டியிலிருந்து 37 கி.மீ. தொலைவிலும் கடம்பூர் உள்ளது. சென்னை, மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில் நகரங்களை இணைக்கும் தொடருந்து நிலையம் கடம்பூரில் உள்ளது.[7]
Remove ads
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 8.98°N 77.87°E ஆகும்.[8] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 84 மீட்டர் (275 அடி) உயரத்தில் இருக்கின்றது.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads