கருங்கல்பாளையம்
தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
கருங்கல்பாளையம் (ஆங்கிலம்: Karungalpalayam) என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1] மகாகவி பாரதி நினைவு நூலகம் என்ற பொது நூலகம் ஒன்று கருங்கல்பாளையத்தில் நிறுவப்பட்டுள்ளது.[2]
கடல் மட்டத்திலிருந்து சுமார் 193 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள கருங்கல்பாளையம் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 11.351600°N 77.738100°E ஆகும். ஈரோடு, வீரப்பன்சத்திரம், மூலப்பாளையம், மூலப்பட்டறை, வீரப்பம்பாளையம், திண்டல், பெரியசேமூர், பழையபாளையம், கனிராவுத்தர்குளம், வேப்பம்பாளையம், கதிரம்பட்டி, மேட்டுக்கடை, வில்லரசம்பட்டி, பவளத்தாம்பாளையம் மற்றும் நஞ்சனாபுரம் ஆகியவை கருங்கல்பாளையம் பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும்.
இங்குள்ள சின்னமாரியம்மன் கோயில்,[3][4][5] சுப்பிரமணியசாமி கோயில்[6] ஆகியவை தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகின்றன. மேலும், மாகாளியம்மன் கோயில் மற்றும் விசுவேசுவரர் பச்சியம்மன் கோயில் ஆகியவை கருங்கல்பாளையம் பகுதியிலுள்ள மற்ற முக்கிய கோயில்களாகும்.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்பு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads