கருங்கல்பாளையம்

தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

கருங்கல்பாளையம் (ஆங்கிலம்: Karungalpalayam) என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1] மகாகவி பாரதி நினைவு நூலகம் என்ற பொது நூலகம் ஒன்று கருங்கல்பாளையத்தில் நிறுவப்பட்டுள்ளது.[2]

விரைவான உண்மைகள் கருங்கல்பாளையம்Karungalpalayam கருங்கல்பாளையம், நாடு ...

கடல் மட்டத்திலிருந்து சுமார் 193 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள கருங்கல்பாளையம் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 11.351600°N 77.738100°E / 11.351600; 77.738100 ஆகும். ஈரோடு, வீரப்பன்சத்திரம், மூலப்பாளையம், மூலப்பட்டறை, வீரப்பம்பாளையம், திண்டல், பெரியசேமூர், பழையபாளையம், கனிராவுத்தர்குளம், வேப்பம்பாளையம், கதிரம்பட்டி, மேட்டுக்கடை, வில்லரசம்பட்டி, பவளத்தாம்பாளையம் மற்றும் நஞ்சனாபுரம் ஆகியவை கருங்கல்பாளையம் பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும்.

இங்குள்ள சின்னமாரியம்மன் கோயில்,[3][4][5] சுப்பிரமணியசாமி கோயில்[6] ஆகியவை தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகின்றன. மேலும், மாகாளியம்மன் கோயில் மற்றும் விசுவேசுவரர் பச்சியம்மன் கோயில் ஆகியவை கருங்கல்பாளையம் பகுதியிலுள்ள மற்ற முக்கிய கோயில்களாகும்.

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads