கோயமுத்தூர் மாப்ளே

சி.ரங்கனாதண்வின் 1996 திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

கோயமுத்தூர் மாப்ளே
Remove ads

கோயமுத்தூர் மாப்ளே (Coimbatore Mappilai) 1996 ஆம் ஆண்டு சனவரி மாதம் 15 ஆம் தேதியன்று விஜய் மற்றும் சங்கவி நடிப்பில் வெளியான காதல், நகைச்சுவை கலந்த தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1] சி. ரங்கநாதன் இயக்கத்தில் வித்யாசாகர் இசையில் இப்படம் வெளியானது. வியாபார ரீதியாக வெற்றியும் பெற்றது.[2] தெலுங்கில் அமலாபுரம் அல்லுடு என்றும் இந்தியில் ராம்புரி டமாட் என்றும் மொழிபெயர்க்கப்பட்டு 2007 ஆம் ஆண்டு வெளியானது.

விரைவான உண்மைகள் கோயமுத்தூர் மாப்ளே, இயக்கம் ...
Remove ads

கதைச்சுருக்கம்

பாலுவும் (விஜய்) கோபாலும் (கவுண்டமணி) வேலை தேடிக்கொண்டிருக்கும் நண்பர்கள். அவர்கள் தங்கியுள்ள வாடகை வீடு பாட்டியம்மாவிற்குச் (நிர்மலாம்மா) சொந்தமானது. அவரின் பேத்தி சுமித்ராவும் (சங்கவி) பாலுவும் காதலிக்கின்றனர். சுமித்ராவின் உறவினரான மகேஷும் (கரண்) அவளை விரும்புகிறான். நகைத்திருட்டு ஒன்றில் பாலு தவறாக மாட்டிக்கொள்ள சுமித்ரா அவனை வெறுக்கிறாள். மகேஷ் தன்னை அடியாட்கள் வைத்து பாலு அடித்ததாகக் குற்றம் சாட்டுகிறான். பாலு பாட்டியம்மாவிடம் சிறுவயதில் தன் தாயை இழந்தபின் சித்தியின் துன்புறுத்தலால் வீட்டைவிட்டு வெளியேறிய சோகக்கதையைச் சொல்கிறான். பாட்டி அவனை நம்புகிறாள். மகேஷும் அவன் தந்தையும் (வினு சக்கரவர்த்தி) பாட்டியின் வீடு மற்றும் சொத்துக்களைக் கைப்பற்றுவதற்காக பாட்டியைக் கொல்ல முயற்சிக்கின்றனர். தாக்குதலுக்கு ஆளான பாட்டியின் சிகிச்சைக்கு பாலு உதவுகிறான். எதிர்பாராவகையில் மகேஷ் இறக்கிறான். பாலுவும் சுமித்ராவும் இணைகின்றனர்.

Remove ads

நடிகர்கள்

Remove ads

இசை

படத்தின் இசையமைப்பாளர் வித்தியாசாகர் ஆவார்.[3]

மேலதிகத் தகவல்கள் வ.எண், பாடல் ...

சுவாரசியமான தகவல்

1996 இல் வெளியான இப்படத்தில் நடிகர் கரண் வரும் காட்சியில் ஒலித்த பின்னணி இசைக்குரலான 'ஷ்ரூவ்வ்வ்வ்' 22 வருடங்கள் கழித்து 2018 இல் கரண் ரசிகர்களிடையே சமூகவலைத்தளங்களில் பிரபலம் ஆனது.[4][5]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads