சம்பூர்ண ராமாயணம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சம்பூர்ண ராமாயணம் என்பது 1958 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இந்தத் திரைப்படம் இந்து தொன்மவியல் இதிகாசமான வால்மீகியின் இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இதில் சிவாஜி கணேசன் மற்றும் என். டி. ராமராவ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். கே. வி. மகாதேவன் இசையில் எம். ஏ. வேணு தயாரித்திருந்தார். கே. சோமு இயக்கியிருந்தார். இத்திரைப்படம் 14 ஏப்ரல் 1958ல் வெளிவந்தது.[2]
கே.வி. சீனிவாசன் என். டி. ராமராவுக்கு தமிழில் குரல் கொடுத்தார். இத்திரைப்படம் 1959 சனவரி 14 ல் மொழிமாற்றம் செய்யப்பட்டு தெலுங்கில் வெளிவந்தது.[3]
Remove ads
வகை
கதை
இத்திரைப்படத்தின் கதை இராமாயணத்தில் இராமனுடைய பிறப்பிலிருந்து விவரிப்பதாக அமைந்துள்ளது.
பரதனின் (சிவாஜி கணேசன்) தாயின் சூழ்ச்சியின் காரணமாக முடிசூடவிருந்த இராமர் 14 வருடங்கள் வனவாசம் செல்ல ஏற்பட்டது. இச்சம்பவமறியாது தாய் கூறிய பின் தெரிந்து கொள்ளும் பரதன் தன் தாயை அவதூறாகப் பேசியவாறு ராமரின் பாதம் நோக்கி ஓடுகிறான். அங்கு இராமருக்கு சேவையாற்ற விரும்பும் பரதனின் அன்பினை மெச்சுகின்றார் இராமரும். பின்னர் நடைபெறும் காப்பியச் சிறப்புமிக்க இராமரின் இலங்கை யுத்தம் இராவண அழிப்பு என்பன திரைக்கதை முடிவாகும்.
Remove ads
நடிகர்கள்
- சிவாஜி கணேசன் ... பரதன்
- என். டி. ராமராவ் ... இராமர்
- பத்மினி ... சீதை
- பி. வி. நரசிம்மபாரதி ... இலட்சுமணன்
- டி. கே. பகவதி ... இராவணன்
- சித்தூர் வி. நாகையா ... தசரதன்
- எஸ். டி. சுப்புலட்சுமி ... கோசலை
- ஜி. வரலட்சுமி ... கைகேயி
- வி. கே. ராமசாமி ... குகன்
- எம். என். ராஜம் ... சூர்ப்பனகை
- சந்தியா ... மண்டோதரி
படக்குழு
- தயாரிப்பாளர்: எம். ஏ. வாசு
- வெளியீடு: எம். ஏ. வி. பிச்சர்ஸ்
- இயக்குநர்: கே. சோமு
- இசை: கே. வி. மகாதேவன்
- பாடலாசிரியர்: ஏ. மருதகாசி
- கதைகளம்: வால்மீகியின் இராமாயணம்
- ஸ்கிரின் பிளே: ஏ. பி. நாகராசன்
- வசனம்: ஏ. பி. நாகராசன்
- சினிமட்டோகிராபி: வி. கே. கோபண்ணா
- படத்தொகுப்பு: டி. விஜயரங்கம்
- பாடல் ஓலிப்பதிவு: டி. எஸ். ரங்கசாமி
- ஆடியோகிராபி: சி. வி. ராமசாமி ஐயர்
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads