சலகண்டாபுரம்
தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்திலுள்ள ஒரு பேரூராட்சி From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜலகண்டாபுரம் (ஆங்கிலம்:Jalakandapuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் மேட்டூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
இப்பேரூராட்சியானது சேலம் மாநகராட்சியில் இருந்து சுமார் 35 கி.மீ. துரத்தில் அமைந்துள்ளது. இப்பேரூராட்சிப் பகுதியில் பெரும்பாலன மக்கள் நெசவு தொழில் மற்றும் விவசாயத் தொழில் மேற்கொண்டு வருகின்றனர். நீர்வள ஆதாரமாக பெரிய ஏரி இப்பேரூராட்சியில் அமைந்துள்ளது. இதனருகில் மேட்டூர் அணை அமைந்துள்ளது.
Remove ads
அமைவிடம்
ஜலகண்டாபுரம் பேரூராட்சிக்குக் கிழக்கில் 35 கி.மீ. தொலைவில் சேலம் உள்ளது. இதன் மேற்கில் மேட்டூர் 28 கி.மீ., வடக்கில் எடப்பாடி 15 கி.மீ. தொலைவில் உள்ளன.
பேரூராட்சியின் அமைப்பு
4.6 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 68 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி எடப்பாடி (சட்டமன்றத் தொகுதி)க்கும், சேலம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4,198 வீடுகளும், 16,184 மக்கள்தொகையும், கொண்டது.[5]
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 11.7°N 77.88°E ஆகும்.[6] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 269 மீட்டர் (882 அடி) உயரத்தில் இருக்கின்றது.
ஆதாரங்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads