மேட்டூர்

From Wikipedia, the free encyclopedia

மேட்டூர்map
Remove ads

மேட்டூர் (Mettur), என்பது தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், தேர்வு நிலை நகராட்சியும் ஆகும். காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பெரிய அணை இங்குள்ளது. அது இந்நகரின் பெயர் கொண்டு மேட்டூர் அணை என அழைக்கப்படுகிறது. இந்நகரின் வாழ்வாதாரமாக அவ்வணை விளங்குகிறது.

விரைவான உண்மைகள்
Remove ads

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 11.47°N 77.47°E / 11.47; 77.47 ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 153 மீட்டர் (501 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மேட்டூர் என்ற பெயர் உருவான விதம்

காவிரி ஆற்று படுகையில் உள்ள மக்கள் ஆற்று நீரின் ஏற்ற இறக்கத்தினால் மேடான பகுதிக்கு இடம் பெயர்ந்து வாழ தொடங்கினார்கள், மேடான பகுதியில் இருக்கும் ஊர் என்பதால் மேட்டூர் என அழைக்கப்படுகிறது.

மக்கள் வகைப்பாடு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 30 [நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 14,282 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 52,813 ஆகும். இந்நகரத்தின் எழுத்தறிவு 83.6% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 1,016 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 4286 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 934 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 10,261 மற்றும் 222 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 88.43%, இசுலாமியர்கள் 3.58%, கிறித்தவர்கள் 7.72% , மற்றும் பிறர் 0.28% ஆகவுள்ளனர்.[5]

மேலும் பார்க்க

வெளி இணைப்புகள்

ஆதாரங்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads