சித்திரகூடம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சித்திரகூடம் (Chitrakoot - चित्रकूट) மத்திய இந்தியாவின் புந்தேல்கண்ட் எனும் காடுகள் அடர்ந்த மத்தியப் பிரதேச மாநிலத்தின் சத்னா மாவட்டத்தில் அமைந்த வரலாறு, கலாசாரம், தொல்லியல் கொண்ட ஊராகும். உத்தரப் பிரதேசம் - மத்தியப் பிரதேசம் மாநிலங்களின் எல்லையை ஒட்டி அமைந்தது சித்திரகூடம். இவ்வூர் 15 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு பேரூராட்சி ஆகும். சித்திரகூடம், உத்தரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களைப் பிரிக்கும் இடமாக உள்ளது. சித்திரகூட ஊரில் பல இந்து கோயில்கள் அமைந்துள்ளது.
இராமன் பதினான்கு ஆண்டு காடுறை வாழ்வின் போது, சீதை மற்றும் இலக்குவனுடன் சித்திரகூட காட்டில் சில மாதங்கள், அனுசுயா, அத்ரி, மார்க்கண்டேயர் போன்ற முனிவர்களுடன் தவமியற்றியதாக இராமாயணத்தில் கூறப்படுகிறது. அமாவாசை, பௌர்ணமி, தீபாவளி, மகரசங்கராந்தி, இராமநவமி போன்ற இந்து சமய திருநாட்களின் போது சித்திரகூடத்தில் பெருங்கூட்டமாக மக்கள் கூடி, இங்கு பாயும் மந்தாகினி ஆற்றில் புனித நீராடி இராமனை வழிபடுவார்கள்
Remove ads
நிலவியல்
மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் மேற்கு - கிழக்காக பரவியுள்ள வடக்கு விந்திய மலைத்தொடரில் உத்தரப் பிரதேச மாநிலத்தின் சித்திரகூட மாவட்டத்திலும், மத்தியப் பிரதேசத்தின் சத்னா மாவட்டத்திலும் சித்திரகூடம் ஊர் பரந்துள்ளது.[1]சித்திரகூடத்தில் மந்தாகினி ஆறு பாய்கிறது.
சித்திரகூட மலைத் தொடர்கள் காமத் மலை, அனுமான் மலை, சீதை குளம், இலக்குவன் மலை எனும் சமயப் புகழ் வாய்ந்த மலைகளைக் கொண்டது.
Remove ads
இதிகாச வரலாறு

இராமன் தனது பதினான்கு ஆண்டு கால காடுறை வாழ்வின் போது, சீதை மற்றும் இலக்குவனுடன் சித்திரகூடம் அடர்ந்த காட்டில் சில மாதங்கள் கழித்தார். அப்போது அத்ரி, அனுசுயா, மார்கண்டேயர் போன்ற முனிவர்களின் நட்பு இராமனுக்கு கிடைத்தது.
சித்திரகூட கானகத்தில் இருந்த இராமனைச் சந்தித்த பரதன், அயோத்தியை அடைந்து பட்டம் ஏற்றுக் கொள்ள வேண்டினான். அவனின் கோரிக்கையை இராமன் மறுத்து விட்டார். பின்னர் தசரதன் இறந்த செய்தி கேட்ட இராமன், தனது தம்பியர்களுடன் இறந்த தன் தந்தை தசரதனுக்கு இறுதிக் காரியத்தை சித்திரகூடத்தில் பாயும் மந்தாகினி ஆற்றின் கரையில் செய்தனர். பின்னர் இராமன் சித்திரகூடத்தை விட்டு மலைக்காடுகள் அடர்ந்த தண்டகாரண்யம் பகுதியை அடைந்தார்.[2]
Remove ads
மக்கள் தொகையியல்
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, சித்திரகூட நகரத்தின் மொத்த மக்கள் தொகை 23,316 ஆகும். அவர்களில் ஆண்கள் 12,675 ; பெண்கள் 10,641 ஆக உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 3666 ஆக உள்ளது. பாலினவிகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 840 என்ற அளவில் பெண்கள் உள்ளனர். சராசரி படிப்பறிவு 70.01 % ஆகவும்; ஆண்களின் படிப்பறிவு 79.49% ஆகவும்; பெண்களின் படிப்பறிவு 58.40 % ஆகவும் உள்ளது. சித்திரகூட நகரப் பஞ்சாயத்து 4,752 வீடுகளைக் கொண்டது. [3]
பார்க்க வேண்டிய இடங்கள்
- மந்தாகினி ஆற்றில் சீதை - இராமன் குளித்த படித்துறை
- காமத் மலை
- சீதை குளித்த இடம் - ஜானகி குண்ட்
- அத்ரி - அனுசுயா ஆசிரமம்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads